/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/allu_1.jpg)
'ராஜாராணி' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தார். 'பிகில்' படத்தைத் தொடர்ந்து, இயக்குநர்அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார். இது பாலிவுட் திரையுலகில் அட்லீயின்அறிமுகப் படமாகும். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குநர்அட்லீயின்அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைவைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படம் பேன் இந்தியா படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.இயக்குநர்அட்லீ கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்து போக, உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)