Skip to main content

பிரபல இயக்குனருடன் இணையும் அல்லு அர்ஜூன்! 

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
allu arjun

 

 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் 'அலா வைகுந்தபுரமலோ' ஹிட்டை தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் படத்தின் ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இந்த படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜூனின் 21வது படத்தை கொரட்டலா சிவா இயக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரட்டலா சிவா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா படத்தை இயக்கி வருகிறார். 

 

'புஷ்பா' படத்தை முடித்துவிட்டு, கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் அல்லு அர்ஜுன். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘புஷ்ப ராஜ்...’ - அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அல்லு அர்ஜுன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
allu arjun about pushpa 3

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார். 

Next Story

அல்லு அர்ஜுனை இயக்கும் அட்லீ

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
atlee next with allu arjun

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, முன்னணி நடிகரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கி அவரும் முன்னணி இயக்குநராக உருவானார். இதைத் தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் படம் இயக்கியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளியான இப்படம் உலகம் முழுவதும் 1143.59 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இப்படத்தை முடித்துவிட்டு விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க கதையும் எழுதி வருவதாகக் கூறியிருந்தார். இந்த நிலையில் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் கூட்டணி வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு தொடக்கத்தில் இத்தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இப்போது கூடுதல் தகவலாக, 2024 இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 பட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். இப்பட படப்பிடிப்பு முடிந்ததும் அட்லீ படத்தின் அறிவிப்பு வெளியாகும் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.