ADVERTISEMENT

காதலனை கரம் பிடிக்கும் ஆலியா பட்; முடிவான திருமண தேதி

10:59 AM Apr 09, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் சமீபகாலமாக இவர்களது திருமணம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வந்தனர். ஆனால் இது குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் ரன்பீர் கபூரின் இல்லத்தில் திருமண ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இவர்களது திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆலியா பட்டின் உறவினர் ஒருவர் கூறுகையில், ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் வரும் 14 ஆம் தேதி பஞ்சாபி முறைப்படி நடைபெற உள்ளதாகவும், 13 ஆம் தேதி மெஹந்தி விழாவுடன் தொடங்கும் இத்திருமண நிகழ்வு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமண விழாவிற்கு ஷாருக்கான், கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, வருண் தவான் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT