Skip to main content

"நான் சம்பாதித்தது இந்தியாவில் தான்" - கனடா நாட்டு குடியுரிமை குறித்து அக்‌ஷய் குமார்

Published on 24/02/2023 | Edited on 24/02/2023

 

Akshay Kumar to renounce Canadian passport

 

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், இந்தி மற்றும் மராத்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கனடா நட்டு குடியுரிமையைப் பெற்றிருந்தார். இதற்கு அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தார். தான் கனடா நாட்டு குடியுரிமையை எடுத்துக் கொண்டதற்கான காரணம் தெரியாமல் மக்கள் விமர்சனம் செய்வது வருத்தமளிக்கிறது என ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

 

மேலும் பேசிய அவர், "இந்தியாதான் எனக்கு எல்லாமே. நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான். அவர்களுக்கெல்லாம் நான் திரும்பக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் பாஸ்போர்ட் மாற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளேன். 

 

முன்னதாக என் படங்கள் சரியாக போகவில்லை. அதனால் வேலை செய்ய வேண்டும் என நினைத்து வேலை நிமித்தமாக கனடா சென்றேன். அப்போது என் நண்பன் கனடாவில் இருந்தான். அவன் அங்கு வர சொன்னதால் விண்ணப்பித்து சென்றேன். அந்த சமயத்தில் எனக்கு இரண்டு படங்கள் ரிலீஸாகாமல் இருந்தன. பின்பு வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது. உடனே என் நண்பன் திரும்பிப் போ மீண்டும் வேலையைத் தொடங்கு என்றான்.  

 

இங்கு வந்தவுடன் இன்னும் சில படங்கள் கிடைத்தன. தொடர்ந்து படங்களின் பணிகளில் பிஸியாகி விட்டேன். பாஸ்போர்ட் வைத்திருந்ததை மறந்துவிட்டேன். ஆனால் பாஸ்போர்ட்டை மாற்ற வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. இப்போது மாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அதற்காக விண்ணப்பித்துள்ளேன்" என்றார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

இளம் வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Chess player Gukesh who set a record at a young age

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார்.

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.