Advertisment

காஜலிடும் அக்‌ஷய்... ஹிந்தி ‘காஞ்சனா’ ஃபர்ஸ்ட் லுக்

லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கிள் ஓடியது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார் லாரன்ஸ்.

Advertisment

akshay kumar

காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது அது உண்மையாகியுள்ளது. லக்‌ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Advertisment

காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள்.

alt="natpu" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d6722a72-34a7-46b5-b31c-01aeaf65bb7b" height="131" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_2.png" width="382" />

ராகவா லாரன்ஸ் கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் அக்‌ஷய் குமாருடன் புகைப்படம் எடுத்தும் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் கிளாப் போர்டுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் சரத்குமார் திருநங்கையாக நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் கண்ணுக்கு கீழே காஜல் இடுகிறார். மேலும் அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

akshaykumar raghava lawrence
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe