Skip to main content

காஜலிடும் அக்‌ஷய்... ஹிந்தி ‘காஞ்சனா’ ஃபர்ஸ்ட் லுக்

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

லாரன்ஸ் தமிழ் திரையுலகில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி பின்னர் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்து, இயக்கியுள்ள காஞ்சனா-3 படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கிள் ஓடியது. இந்த படம் வெளியானவுடன் அவருடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இந்த முறை தமிழ் சினிமாவில் இல்லை, பாலிவுட் சினிமாவில் அக்‌ஷய் குமாரை வைத்து இயக்கி வருகிறார் லாரன்ஸ்.
 

akshay kumar


காஞ்சனா 3 வெளியாகுவதற்கு முன்பே ராகவா லாரன்ஸ் ஹிந்தி சினிமாவிற்குள் நுழைகிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது அது உண்மையாகியுள்ளது. லக்‌ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 

காஞ்சனாவில் பேய்களுக்கு பயந்த ஹீரோ, பின் பேய்களுக்காக வில்லன்களை கொல்வார். அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கும் ஹிந்தி படத்தில், மூன்று பேய்களுக்கு பதிலாக ஒரு பேய் என தமிழ் படத்திலிருந்து சில மாற்றங்களை செய்திருக்கிறார்கள். 
 

natpu


ராகவா லாரன்ஸ் கடந்த மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் அக்‌ஷய் குமாருடன் புகைப்படம் எடுத்தும் பதிவிட்டிருக்கிறார். இந்த படத்தின் ஹீரோயின் கியாரா அத்வானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் கிளாப் போர்டுடன் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தமிழில் சரத்குமார் திருநங்கையாக நடித்த கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
 

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் கண்ணுக்கு கீழே காஜல் இடுகிறார். மேலும் அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி படம் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தம்பியுடன் களமிறங்கும் பிரபல நடிகர்

Published on 25/06/2022 | Edited on 25/06/2022

 

ks ravikumar directing next movie starring Raghava Lawrence and elvin

 

'ஃபைவ் ஸ்டார் கிரியேக்ஷன்' சார்பாக கதிரேசன், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரித்து இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக் கட்ட பணியில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளார். 

 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சகோதரர் எல்வினுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க, ட்ரென்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு கே.எஸ் ரவிக்குமார் தமிழ் படம் இயக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

 

 

Next Story

"மன்னித்து விடுங்கள், இனி அப்படி நடக்காது" -  நடிகர் அக்ஷய் குமார் வருத்தம்  

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

Akshay Kumar apologises to fans after pan masala brand advertisement

 

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். இவர் சமீபத்தில் தனியார் நிறுவனத்தின் பான்மசாலா விளம்பரத்தில் நடித்திருந்தார். இவருடன் இந்த விளம்பரத்தில் அஜய் தேவ்கனும், ஷாருக்கானுக்கு நடித்திருந்தனர். ஆனால் அக்ஷய் குமார் நடித்தது  மட்டும் பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இதற்கு கரணம் என்னவென்றால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகையிலை தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அக்ஷய் குமார் கூறியிருந்தார். ஆனால் அதனை மீறி இந்த பான் மலசல விளம்பரத்தில் நடித்ததால் நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அக்ஷய் குமார் இதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என்னை மன்னித்து விடுங்கள். இனி வரும் காலங்களில்  இப்படிப்பட்ட விளம்பரத்தில் நடிக்க மாட்டேன். உங்களின் உணர்வுகளை பாதிப்பதால் பான்மசாலா விளம்பரத்தில் இருந்து பின் வாங்குகிறேன்.  இதில் கிடைத்த ஊதியத்தை நலத்திட்டங்களுக்கு செலவிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக அல்லு அர்ஜுன் புகையிலை விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என கூறி பலரின் பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.