Skip to main content

நம்பி இறங்கிய அக்ஷய் குமார் - பரிதாப நிலையில் படக்குழு

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

Akshay Kumar - The crew in a miserable condition

 

இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். 'பச்சன் பாண்டே' படத்தை தொடர்ந்து 'சாம்ராட் பிரித்விராஜ்' படத்தில் நடித்துள்ளார். மன்னர் பிரித்விராஜ் சவுகான் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பிரித்விராஜ் சவுகான் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்க, கதாநாயகியாக மனுஷி சில்லர் நடித்துள்ளார். மனுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், சோனு சூட், அஷுதோஸ் ராணா, லலித் திவாரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தை சந்திர பிரகாஷ் திவேதி இயக்கியுள்ளார். வரலாற்று படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. 

 

இந்நிலையில் 'சாம்ராட் பிரித்விராஜ்' படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் படத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரும் நம்பிக்கையுடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், பட்ஜெட்டில் பாதியை கூட வசூலிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கு டிக்கெட் ஏதும் விற்பனை ஆகாததால் தியேட்டரை விட்டு வெளியேறும் நிலைமைக்கு படம் தள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படக்குழு மிகுந்த அதிர்ச்சியுடனும் சோகத்திலும் உள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளியான 'தாகட்' படத்திற்கும் இதே போன்று நிலைமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.   

 

 

சார்ந்த செய்திகள்