akshrahassan

'விவேகம்' படத்தில் நடித்த அக்‌ஷராஹாசனின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் கசிந்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து தன் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன்...

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

“இது ஒரு சினிமா படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில்கள். வாய்ப்புகளை பொறுத்து இதுபோல புகைப்படங்கள் வரத்தான் செய்யும். இது தொழில் ரீதியான விஷயம். இதில் ஏன் இவ்வளவு விமர்சனங்கள்" என்றார். மேலும் தனது அனுமதியில்லாமல் அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக மும்பை காவல் துறையை தான் அணுகி இருப்பதாகவும், இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் 'மீடூ' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.