Skip to main content

ஹிந்தியில் ரீமேக்காகும் மேலும் ஒரு அஜித் படம்! 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். இந்த படம் அந்த வருட பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜில்லா படத்துடன் வெளியானது. அஜித், விஜய் ஒரே நாளில் ரிலீஸ் செய்த கடைசி படங்கள் இதுதான். அதனை தொடர்ந்து ஒரே நாளில் ரிலீஸ் செய்யவில்லை. வீரம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்று வெளியானது. 
 

vedalam

 

ஹிந்தியில் ரீமேக்காகும் மேலும் ஒரு அஜித் படம்! 

 

இந்நிலையில் ஹிந்தியிலும் இப்படத்தை எடுக்க ஆர்வம் காட்டினர். அதனை தொடர்ந்து பச்சன் பாண்டே என்று வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு தலைப்பு வைத்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். இதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கின்றார். இந்த வருட இறுதியில் வெளியாகுவதாக இருந்த பச்சன் பாண்டே படத்தை அமீர் கானின் லால் சிங் சட்டா படத்தின் ரிலீஸால் அடுத்த வருடத்திற்கு மாற்றியுள்ளது படக்குழு. 

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடிக்க இருக்கிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அஜித் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தங்கையாக நடித்த லக்‌ஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிப்பதற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை நடிகர் வருண் தவானின் அண்ணன் ரோஹித் தவான் இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்திக்கு ஏற்றவாறு திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.