Skip to main content

ஹிந்தியில் ரீமேக்காகும் மேலும் ஒரு அஜித் படம்! 

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் வீரம். இந்த படம் அந்த வருட பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜில்லா படத்துடன் வெளியானது. அஜித், விஜய் ஒரே நாளில் ரிலீஸ் செய்த கடைசி படங்கள் இதுதான். அதனை தொடர்ந்து ஒரே நாளில் ரிலீஸ் செய்யவில்லை. வீரம் ஹிட் அடித்ததை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கட்டமராயுடு என்று வெளியானது. 
 

vedalam

 

ஹிந்தியில் ரீமேக்காகும் மேலும் ஒரு அஜித் படம்! 

 

இந்நிலையில் ஹிந்தியிலும் இப்படத்தை எடுக்க ஆர்வம் காட்டினர். அதனை தொடர்ந்து பச்சன் பாண்டே என்று வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கிற்கு தலைப்பு வைத்து ஷூட்டிங்கை தொடங்கியுள்ளனர். இதில் அஜித்தின் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கின்றார். இந்த வருட இறுதியில் வெளியாகுவதாக இருந்த பச்சன் பாண்டே படத்தை அமீர் கானின் லால் சிங் சட்டா படத்தின் ரிலீஸால் அடுத்த வருடத்திற்கு மாற்றியுள்ளது படக்குழு. 

இந்நிலையில் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தையும் ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் விக்கி கவுசல் நடிக்க இருக்கிறார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அஜித் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் தங்கையாக நடித்த லக்‌ஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிப்பதற்கு தேர்வு நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தை நடிகர் வருண் தவானின் அண்ணன் ரோஹித் தவான் இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்திக்கு ஏற்றவாறு திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Next Story

சிவசேனாவில் இணைந்த பாலிவுட் நடிகர்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Bollywood actor joined Shiv Sena

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் மற்றும் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர், பா.ஜ.க. மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் மூத்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் கோவிந்தா சிவசேனாவில் இன்று (28.03.2024) தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் சிவசேனாவில் இணைந்தது குறித்து பாலிவுட் நடிகர் கோவிந்தா கூறுகையில், “நான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரசியலில் இருந்தேன். அதாவது 14வது மக்களவை காலம் ஆகும். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் அரசியலுக்கு வந்திருப்பது ஆச்சரியமான தற்செயல் நிகழ்வு ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.  சிவசேனாவில் இணைந்த நடிகர் கோவிந்த மும்பை வடமேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.