'நேர்கொண்டபார்வை'படத்திற்குபிறகு,அஜித் - எச். வினோத்இணையும்படம் 'வலிமை'. கடந்த வருடம் ஆரமிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனாதொற்று பரவலால்பாதிக்கப்பட்டு, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
சென்னையில் சிலநாட்கள்படப்பிடிப்பு நடந்த பிறகு, ஹைதராபாத்தில்,படத்தின்அடுத்தகட்டபடப்பிடிப்பு தொடங்கியது. இதில்அஜித்தும்கலந்துகொண்டு நடித்து வந்தார். இந்தநிலையில், கடந்த வாரபடப்பிடிப்பின்போது, அவருக்குகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அஜித், தற்போது சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. அஜித்திற்கு ஏற்பட்டகாயம்சிறியதுதான் என்றாலும், 'வலிமை' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 'வலிமை'படப்பிடிப்பில், அஜித்திற்கு காயம்ஏற்படுவது இதுஇரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த பிப்ரவரிமாதம் நடந்த படப்பிடிப்பின்போதும், அஜித்காயம்அடைந்ததுகுறிப்பிடத்தக்கது.