Advertisment

சென்னை வந்து அஜித்தை இல்லத்தில் சந்தித்த போனிகபூர்... விரைவில் புதிய அறிவிப்பு !

ajith

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும், சதுரங்கவேட்டை, தீரன் பட இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்தி பரவி அது பிங்க் படத்தின் ரீமேக் என்றும் கூறப்பட்டது. பின்னர் இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் அல்ல என்று வினோத் சமூக வலைத்தள பக்கத்தில் மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. பிறகு எச்.வினோத் இந்த தகவலை மறுத்து தான் எந்த ஒரு வலைத்தளத்திலும் இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் போனிகபூர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை வந்து அஜித்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பட வேலைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தற்போது புதிய தகவல் கசிந்துள்ளது. மேலும் இதற்கிடையே 'விஸ்வாசம்' படம் முடிவடைந்த நிலையில் ஓய்வு எடுக்க குடும்பத்துடன் அஜித்குமார் நேற்று கோவா புறப்பட்டுச் சென்றார். சென்னை திரும்பியதும் போனிகபூர் தயாரிக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ajith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe