Skip to main content

படப்பிடிப்பு தளத்தில் பிரபாஸை சந்தித்த அஜித்!

Published on 26/02/2019 | Edited on 26/02/2019
ajit


நடிகர் அஜித் பிங்க் பட  ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. அஜித் நடித்த பல படங்களின் படப்பிடிப்பு இங்குதான் நடைபெற்றது என்பது குறிப்பித்தக்கது.
 

பிங்க் ரீமேக்கை தமிழில் இயக்குபவர் சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத். நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர்தான் இதை தயாரிக்கிறார்.
 

இந்நிலையில் பிங்க் ரீமேக் நடிபெறும் படப்பிடிப்பு தளத்திற்கு அருகிலேயே பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தின் படப்பிடிப்பு மற்றும் மாராக்கர்: அரபிக்கடலின்டே சிம்மம் என்னும் மலையாள படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
 

அஜித் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டு, சாஹோ படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று, பிரபாஸுடன் நீண்ட நேரம் உரையாடி இருக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் மலையாள இயக்குனர் ப்ரியதர்ஷனையும் சந்தித்து உரையாடி இருக்கிறார். அவர்கள் இருவரையும் சந்தித்த புகைப்படங்களில் அஜித், ப்ரியதர்ஷன் சந்தித்த புகைப்படம் தான்  அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.