ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர் அஜித்தை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை என்றொரு படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ajith kumar

Advertisment

Advertisment

இந்த படத்தை தொடர்ந்து அஜித் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை செய்து வருகிறது படக்குழு. போனி கபூர் பல இடங்களில் அதிகாரப்பூர்வமாக இதை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அஜித் குறித்து பரவிய வதந்திக்கு ட்விட்டரில் போனிகபூர் ஒரு பதிவை போட்டு முற்று புள்ளி வைத்துள்ளார். இதனையடுத்து ஆகஸ்ட் 8ஆம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியிடுவதாக அண்மையில் போனி கபூர் தெரிவித்திருந்தார்.

இன்று மாலை ஆறு மணிக்கு ‘தீ முகம்’ என்ற தீம் பாடலை வெளியிடுவதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கூட்டம் கூட்டமாக தன்னை பார்க்க வந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தல அஜித் முதன் முறையாக மொபைலில் தானே செல்ஃபீ எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.