ajith

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு நிதியுதவி அளித்துவருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக நடிகர் அஜித் இந்த நிதியை வழங்கியுள்ளார். முன்னதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், நடிகர் அஜித் ரூ.2.5 கோடி நன்கொடையாக வழங்கினார் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நன்கொடையாக வழங்கியதாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி சுரேஷ் சந்த்ரா தெரிவித்துள்ளார்.

Advertisment