Skip to main content

நெடுநாள் நண்பரின் தாய் மறைவு... அஜித் சோகம்!

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

நடிகர் அஜித் குமாரின் நீண்ட நாள் மேனேஜரும், சில முன்னணி நடிகர்களுக்கு பிஆர்ஓவாகவும் இருக்கின்ற சுரேஷ் சந்திராவின் தாயார் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை காலமானார். 
 

ajith suresh chandra

 

 

இச்செய்தியை அறிந்த அஜித், உடனடியாக சுரேஷ் சந்திராவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் அஞ்சலி செலுத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இல்லாமல் தலையில் கருப்பு டை, உடலும் மெலிந்த தோற்றத்தில் இருந்தார்.கோலிவுட்டை சேர்ந்த திரைபிரபலங்கள் சுரேஷ் சந்திராவிற்கு போன் மூலமாகவே நேரில் சென்றோ ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
 

"சுரேஷ் சந்திராவுக்கும் அஜித்திற்குமான நட்பு அஜித்தின் முதல் படமான அமராவதி காலத்திலேயே தொடங்கியது. அமராவதி படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது, அதே பகுதியில் அப்போது பிரபலமாக இருந்த இன்னொரு நடிகரின் படப்பிடிப்பும் நடந்தது. அந்த விசயம் தெரிந்தவுடன், அமராவதி படக்குழு உள்பட அங்கு கூடியிருந்த மக்களும் அந்த நாயகரைப் பார்க்கச் சென்றுவிட்டனர். அனைவரும் சென்றபோதும் ஒருவர் மட்டும் அஜித்துடனேயே இருந்தார். அவரிடம் “நீங்க போகலயா?” என்று அஜித் கேட்க, “அவர்கள் எல்லோரும் இன்றைய நாயகனைப் பார்க்கப் போயிருக்காங்க, நான் நாளைய நாயகனுடன் இருக்கிறேன்” என்று கூறி அஜித்தை நெகிழவைத்த அந்த சுரேஷ் சந்திரா, பின்னர் அஜித் நற்பணி மன்றத்தின் தலைவராகவும் மன்றங்கள் கலைக்கப்பட்டபின் இன்று வரை அஜித்தின் பி.ஆர்.ஓவாகவும் அஜித்திற்கு நெருக்கமாக இருக்கிறார். அஜித் படங்கள் மட்டுமன்றி பிற படங்களுக்கும் மக்கள் தொடர்பு பணிகள் செய்துவருகிறார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.