Skip to main content

அஜித், விஜய் இனி தமிழ்நாட்டில் ஷூட்டிங் நடத்த முடியாது? 

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

‘தளபதி 63’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, அட்லீ இயக்குகிறார். 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் பிரபலம் அடைந்த கதிர், யோகி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்தப்  படத்தின் படப்பிடிப்பு பூஜை பிரமாண்டமாக போடப்பட்டு, ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் பின்னி மில்லில் நடைபெற்று வந்தது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் பின்னி மில் முழுவதும் சூழ்ந்துவிட்டனர். நூறுக்கும் மேற்பட்ட ரசிகர்களை நேரில் வந்து பார்த்து, கை காட்டினார் நடிகர் விஜய். இதனை அடுத்து பின்னி மில்லில் ரசிகர்களின் கூட்டத்தினால், தற்போது ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

vijay


முன்னதாக நடிகர் அஜித் இதுபோன்ற தடைகளை யோசித்துதான் தமிழக சப்ஜெட்டாக இருந்தாலும், ஆந்திராவிலுள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் செட் போட்டு எடுத்து முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். 'வீரம்' படத்தில் கதைக்களம்  ஒட்டன்சத்திரம் என்று வந்தாலும், படமாக்கப்பட்டது ஆந்திராவில்தான். இதே நிலைதான் வேதாளம், விவேகம், தற்போது வெளியாகியுள்ள விஸ்வாசம் வரை. வீரத்தை தொடர்ந்து அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் பல காட்சிகள் சென்னையிலேயே எடுக்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் அன்புத் தொல்லைகளை சகித்துக்கொண்டுதான் நடைபெற்றது. அந்தப் படத்தில் நடித்த அருண் விஜய் ஒரு பேட்டியில், 'நானும் அஜித்தும் ஷூட்டிங் இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். சிலர் அஜித் ரசிகர்கள் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்று அஜித்திடம் சொன்னார்கள். அதற்கு அவர், என் ரசிகர்கள் அப்படியெல்லாம் நடந்துகொள்ள மாட்டார்கள் என்றார். மேலும் அவர்களை அமைதியாக வைத்துக்கொள்ள தானே அந்த இடத்திற்கு சென்று அமைதியாக இருக்குமாறு கையசைத்தார். உடனடியாக அவரின் ரசிகர்கள் அமைதியானார்கள்' என்று கூறினார் அருண் விஜய். 
 

இப்போதெல்லாம் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் பொதுவெளியில் எடுக்க வேண்டும் என்றால் நள்ளிரவிலோ அல்லது திடீரென வந்து யாருக்கும் தெரியாமல் எடுத்துவிட்டு செல்கிறார்கள். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தில் இப்படியும் சில காட்சிகள் படமாக எடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பு வெளியான மெர்சல் திரைப்படத்தில் மதுரையில் நடக்கும் பகுதி முழுவதும் செட் போட்டு எடுக்கப்பட்டது. 'பேட்ட' படத்தின் மதுரை காட்சிகளும் சென்னைக்கு அருகில் செட் போட்டு படமாக்கப்பட்டவையே.  
 

vjs


அதே நேரம் சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு விழாவில் மன்சூர் அலிகான் பேசும்போது, "அஜித் மிகவும் நல்ல மனிதர்தான். தமிழ்நாட்டில் அதிக ரசிகர்கள் அவருக்குதான் இருக்கிறார்கள். ஆனால், அவர் தன் படத்தின் ஷூட்டிங்கையெல்லாம் வெளியூரில் வைக்கிறார். இதனால் வெளியூர் தொழிலாளர்கள்தான் பயனடைகிறார்கள். தமிழ் சினிமா தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையிழக்கிறார்கள். அவர் தமிழ்நாட்டில் தன் ஷூட்டிங்கை நடத்த வேண்டும்" என்று பேசினார். இப்படியும் ஒரு கருத்து இருக்கிறது. இருந்தாலும் தயாரிப்பு நிறுவனங்கள் ரசிகர்களின் அன்புத்தொல்லையில்லாமல் சுமூகமாக படப்பிடிப்பை நடத்தவே விரும்புகிறார்கள். 
 

தற்போது விஜய்க்கும் அஜித்துக்கும் தமிழ்நாட்டில் எக்கச்சக்க ரசிகர்கள் இருப்பதுபோல, ரஜினிக்கு வெளிநாடுகளில் மவுசு உண்டு. கபாலி திரைப்படம் மலேசியாவில் எடுக்கப்பட்டபோது அங்கும் இதே கஷ்டத்தை படக்குழுவினர் அனுபவித்தார்கள்.  விஜய், அஜித் தங்களின் படபிடிப்புகளை இதுபோல செட்களிலும், வெளிமாநிலங்களிலும் எடுப்பதற்கு முன்னோடியாக இருந்தவர் ரஜினிதான். ரஜினி முத்து, அருணாச்சலம், படையப்பா காலத்திலிருந்தே கிராமப்புற படப்பிடிப்பு என்றால் மைசூர், மாண்டியா பகுதிகளில்தான் நடக்கும். மக்கள் செல்வன் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதி  அவருக்கு எங்கு ஷூட்டிங் வைத்தாலும் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார். தற்போது ஆலப்புழாவில் நடந்துவரும் 'மாமனிதன்' படப்பிடிப்பில் கேரள ரசிகர்கள் அவரை கொண்டாடித் திண்டாட வைக்கின்றனர். '96' மலையாள வெர்ஷனின் வெற்றி எஃபக்ட் இது. போகிற போக்கை பார்த்தால் தமிழ்நாட்டில் பெரிய நட்சத்திரங்களின் படங்களின் ஷூட்டிங்கே வைக்க முடியாதுபோல...
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘காதலே காதலே...’ - ‘96’ பட ரசிகர்களுக்கு குட் நியூஸ்

Published on 10/02/2024 | Edited on 10/02/2024
vijay sethupathi trisha 96 movie re released

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 96. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படமும் காதலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. 

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. அதன் பிறகு தற்போது வரை எந்த அப்டேட்டும் வரவில்லை. இந்த நிலையில் இப்படம் தற்போது ரீ ரிலீஸாகவுள்ளது. காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி தமிழக அளவில் இப்படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் இப்பட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.  

Next Story

5 நிமிடம் நிற்காத கைதட்டு - சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு பாராட்டு

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
viduthalai get standing ovation in Rotterdam Film Festival

53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழா, கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில், பல்வேறு நாடுகளிலிருந்து திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த வகையில், பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில் ராம் இயக்கியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' தேர்வாகியது. இப்படம் இன்னும் வெளிவராத நிலையில் முதல் முறையாக அங்கு கடந்த 30ஆம் தேதி திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவின் லைம்லைட் பிரிவில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பாகம் 1’ படமும் தேர்வாகியது. மேலும் விடுதலை இரண்டாம் பாகமும் இதில் ப்ரீமியர் செய்யப்பட தேர்வாகியது. அதன்படி ‘விடுதலை பாகம் 1’ நேற்று (31.02.2024) திரையிடப்பட்டது. படம் முடிந்தவுடன் திரையரங்கில் அமர்ந்திருந்த அனைவரும், எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். இதை தமிழகத்தில் இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் எக்ஸ் தளத்தில் தெரிவித்து, அது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளது. விடுதலை இரண்டாம் பாகம் வருகிற 3ஆம் தேதி திரையிடப்படவுள்ளது.

விடுதலை படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாகம் 1 கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.