Skip to main content

அஜித்தின் 61வது படமும் ரீமேக்கா?

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்திருக்கும் இது பிங்க் என்னும் ஹிந்தி படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. 
 

ajith kumar

 

 

இந்த படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித்தின் 60வது படம் உருவாகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் வகையில் உருவாக இருப்பதாகவும், அஜித் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

zombi


இந்நிலையில் இந்த வருடம் பாலிவுட்டில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கிலும் தல அஜித் நடிக்க விரும்புவதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளன. இந்தியாவில் நடக்கும் சாதி கொடுமைகளை தோலுறிக்கும் படமாக வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தை அஜித் போன்ற ஒரு நடிகர் நடித்தால் அதில் பேசப்படும் விஷயம் கண்டிப்பாக பெரும்பான்மை மக்களை சென்றடையும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் ஆளாக ஜனநாயக கடமையாற்றிய அஜித்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Ajith come to the polling station and cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். அதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித் காத்திருந்து பின்பு முதல் ஆளாக வாக்களித்தார்.

Next Story

 நடிகர் அஜித் வீட்டின் தடுப்புச்சுவர் முற்றிலுமாக இடிப்பு

Published on 23/10/2023 | Edited on 23/10/2023

 

Actor Ajith house barrier completely demolished

 

சென்னையில் நடிகர் அஜித் வசித்து வரும் ஈஞ்சம்பாக்கம் வீட்டின் முகப்பு மற்றும் தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறை இடித்துள்ளது. 

 

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில்  சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணியானது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  அக்கரை முதல் ஈஞ்சம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் சிறிது தூரம் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

அதில், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் நடிகர் அஜீத் வசித்து வரும்  வீட்டின் முன்பு உள்ள முகப்பு மற்றும் தடுப்புச் சுவர் சாலை விரிவாக்க பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்று அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் மதில் சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே நெடுஞ்சாலைத் துறை தரப்பிலிருந்து சுவர்கள் இடிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு நெடுஞ்சாலைத்துறை தரப்பிலிருந்து புதியதாகத்  தடுப்புச் சுவர் கட்டி தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.