Skip to main content

டாடா படத்தின் தாக்கம்; கணவருடன் சேர மனைவி விருப்பம்; நெகிழ்ந்து போன இயக்குநர்

Published on 17/02/2023 | Edited on 17/02/2023

 

After watching dada movie wife expressed her desire live with her husband

 

சிங்கிள் மதர் ஒருவர் தனக்கு அனுப்பிய வாட்சப் சாட்டை பொதுவெளியில் பகிர்ந்துள்ள ‘டாடா’ பட இயக்குநரின் ட்வீட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாடா'. ரிலீஸுக்கு முன்பாகவே திரைப் பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு இந்த படத்தின் ப்ரிவீவ் ஷோ திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி பேச, ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியிலும் அப்ளாசை அள்ளியது டாடா. சமீபத்தில் வெளியான இப்படம்., ஃபீல் குட் காதல் கதை லிஸ்டில் இடம்பிடித்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க, ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுவரும் ‘டாடா’வுக்கு பின்னணியில் இருக்கும் கணேஷ் கே பாபுவை எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

 

அதே ஆச்சரியத்துடன் படக்குழுவை சந்தித்த நடிகர் கமலஹாசனும் தனது அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். முதல் படத்திலேயே முரட்டு ஹிட் கொடுத்துள்ள இயக்குநரை, கோலிவுட் வட்டாரம் சும்மா விடுமா என்ன... டாடா படத்துக்கு கிடைத்த முதல் நாள் ரெஸ்பான்சை வைத்தே, பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்‌ஷன் இயக்குநர் கணேஷ் கே பாபுவுடன் அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தை போட்டுள்ளது. லைகா நிறுவனம் தற்போது கமலின் இந்தியன் - 2, ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் 'லால் சலாம்' மற்றும் அஜித்தின் 62வது படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையில், இயக்குநர் கணேஷ் கே பாபுவின் ட்விட்டர் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தன் குழந்தையை தனியாக வளர்க்கும் தாய் ஒருவர், டாடா படம் பார்த்த பிறகு தனது கணவருடன் சேர இருப்பதாக இயக்குநரிடம் வாட்சப்பில் உருகியுள்ளார். இதை அவரின் அனுமதியோடு, அவரது அடையாளத்தை மறைத்துவிட்டு இயக்குநர் பதிவிட்டு... ‘இதுதான் எனக்கு கிடைத்த உண்மையான வெற்றி’ என நெகிழ்ச்சியாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் இயக்குநரை பாராட்டி அந்த பதிவை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படம் வெளியாவதற்கு முன்பே பரிசு - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
star movie director elan got a plot from producer before a movie release

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின், ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியான நிலையில் அண்மையில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

star movie director elan got a plot from producer before a movie release

இந்த நிலையில் இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர் வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். இதனை இளன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, மகிழ்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ள எனது தயாரிப்பாளர் பெண்டேலா சாகருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். நான் அவரை படம் பார்க்க அழைத்தபோது, ​​அவர் அதைப் பார்ப்பதற்கு முன்பு எனக்கு பரிசளிக்க வேண்டும் என்று கூறினார்” என பதிவிட்டுள்ளார்.

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.