Skip to main content

ஒரே நாளில் 3 லட்டு!!! மகிழ்ச்சியில் இசையமைப்பாளர் அருள்தேவ்! 

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

aruldev halitha shameem

ஹலிதா ஷமீம் - அருள்தேவ்

 

வித்யாசாகருடன் பல நூறு திரைப்படங்கள்... பாகுபலி 2, நடிகையர் திலகம் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள்... இசைக்கோர்ப்பு எழுதி இசையமைக்கக்கூடிய திறனுள்ள வெகுசில இசையமைப்பாளர்களில் ஒருவர்... இப்படி ஸ்ட்ராங்கான பின்னணியுடன் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் அருள்தேவ். 'கத்துக்குட்டி', 'பூவரசம் பீப்பி' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் 'ரெட்ட சட கூப்புடுதே முத்தம்மா' பாடல் ரூரல் வைரல் ஹிட். சமீபத்தில் சரிகமா தயாரிப்பில் 'கண்ணாலே பேசி பேசி கொல்லாதே' பாடலை நவீனமாக்கி இசையமைத்திருந்தார் அருள்தேவ். 2 மில்லியனுக்கும் மேலாகப் பார்க்கப்பட்டிருக்கிறது அந்தப் பாடல்.

 

aruldev

 

'சில்லுக்கருப்பட்டி' வெற்றிக்குப் பிறகு ஹலிதா ஷமீம் இயக்கிய 'ஏலே' நேரடியாக விஜய் டிவியில் வெளியானது. சமுத்திரக்கனி முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த இந்தப் படம் இயல்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. இப்படத்தில் அருள்தேவின் பின்னணி இசை பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படி பரபரவென இயங்கிவரும் அருள்தேவுக்கு நாளை (05 மார்ச் 2021) ஒரு முக்கிய நாளாக அமையவிருக்கிறது. நாளை, இவர் இசையமைத்துள்ள 'மிருகா' திரைப்படம் வெளியாகிறது. ஸ்ரீகாந்த், லக்ஷ்மிராய் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் புலி முக்கிய இடம் பெறும் ஃபாரஸ்ட் அட்வென்ச்சர் திரைப்படமாகும்.

 

அதே நாளில் இவர் இசையமைத்துள்ள குறும்படமான 'ஸ்வீட் பிரியாணி' 'ONVI movie' என்ற புதிய OTT தளத்தில் வெளியாகிறது. இக்குறும்படத்தை இயக்கியிருப்பவர், ஏற்கனவே 'டுலெட்' என்ற குறும்படத்துக்காக பல நாடுகளில் திரைப்பட விழாக்களில் விருது பெற்றவரான ஜெயச்சந்திர ஹாஷ்மி. இதில் புகழ்பெற்ற ஆர்ஜேவும் ப்ராங்க் நிகழ்ச்சி நடத்துபவருமான சரித்திரன் நடித்துள்ளார். மேலும் நாளை 'ஏலே' திரைப்படம் நெட்ஃப்ளிக்சில் வெளியாகிறது. இப்படி, ஒரே நாளில் மூன்று லட்டு சாப்பிடும் மகிழ்ச்சியில் இருக்கிறார் அருள்தேவ்.  

 

            

சார்ந்த செய்திகள்

Next Story

“இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான்” - சமுத்திரக்கனி 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
samuthirakani speech in Ramam Ragavam Teaser Launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த  விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சமுத்திரக்கனி பேசுகையில், “அப்பா கதை என்றாலே கேட்டுவிடுவது. அப்படித்தான் இந்த கதையையும் கேட்டேன். அப்பா மகன் உறவை புரிந்து கொள்ளவே முடியாது. நிறைய அப்பாக்கள் என்னிடம், மகனை பற்றி பேசியிருக்கிறார்கள். பத்து நாள் முன்னாடி கூட சிவகாசியில், ஒரு அப்பா, அவரின் மகனிடம் பேசச் சொன்னார். ஃபோனில் கேம் ஆடிக்கொண்டே இருக்கிறான், தப்பான வழியில் போய்விடுவானோ என பயமாக இருப்பதாக சொன்னார். பையனிடம் பேசினேன். அவனுக்கு ரொபோட்டிக் ரொம்ப பிடிக்கும் என்றும் அதை அவனே தயாரிக்கப் போவதாகவும் சொன்னான். 

அதோடு அதை அப்பாவால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றான். உடனே அவனின் அப்பாவிடம் பத்து நிமிஷம் பேசினேன். இங்கு சரி செய்ய வேண்டியது அப்பாக்களைத் தான். மகன் என்னமோ செய்ய வேண்டும் என நினைக்கிறான். அதை செய்யவிடுங்கள். உங்களுடைய அறிவை அவன் மூளையில் திணிக்காதீர்கள். எல்லோரும் அவரவர் இடத்தில் மிகச் சரியாக இருக்கிறார்கள்” என்றார்.  

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார்.