Skip to main content

வெள்ளத்தால் துபாயில் சிக்கித் தவித்த அதர்வா!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

அதர்வா நடிப்பிக் கடைசியாக வெளியான படம் கட்டலகொண்டா கணேஷ் என்னும் தெலுங்கு படம். இதன்பின் அவர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதிஆட்டம், ஆர் கண்ணன் இயக்கத்தில் படமொன்றில் நடித்து வருகிறார்.
 

adharva

 

 

இதில் இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக அஸர்பைஜான் செல்லவிருந்த அதர்வா துபாய் விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு பெய்து வரும் கனமழையால் துபாயில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து புறப்படும்  விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதனால் துபாய் விமான நிலையத்திலேயே நடிகர் அதர்வா 24 மணிநேரத்திற்கும் மேலாக சிக்கித் தவித்துள்ளார். கனமழை நின்றபின் விமான நிலையத்திலுள்ள ஓடு பாதைகளை சரிசெய்து பின்னர் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் அதர்வா. திங்கள்கிழமை மதியம் அஸர்பைஜான் சென்று படக்குழுவுடன் இணைந்துள்ளார். அஸர்பைஜானில் இந்த படபிடிப்பானது வருகிற 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா நடிக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், அமிதாஸ் பிரதான் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். 

Next Story

சிக்கிய புர்ஜ் கலிஃபா; மிதக்கும் 'துபாய்'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
the trapped Burj Khalifa; Floating 'Dubai'

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

கடந்த சில நாட்களாகவே துபாயில் வரலாறு காணாத அளவிற்குக் கன மழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.