Skip to main content

ஆபத்திலிருந்து மீட்டதால் முத்தமிட்ட ரஜினி - இயக்குநர் சாதிக்  பகிரும் சுவாரசியம்

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

 ADD Director Sadiq Interview

 

தொலைக்காட்சியோ, செல்போனோ, சினிமாவோ விளம்பரங்கள் இல்லாமல் இன்று நம்முடைய வாழ்க்கை இல்லை என்கிற அளவுக்கு நம்மைச் சுற்றி பல்வேறு விளம்பரங்கள் பல்வேறு வகைகளில் வலம் வருகின்றன. விளம்பர உலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்து   விளம்பரப்பட இயக்குநர் சாதிக் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

நான் சினிமாவுக்கு வந்தது நடிக்கும் ஆசையில் தான். ரஜினி சாருடன் படையப்பா, சுதீப் சாருடன் வில்லனாக ஒரு படம் என்று சில படங்கள் செய்த பிறகு விளம்பரப்பட உலகுக்குள் வந்தேன். இதுவரை 1000 விளம்பரப் படங்களை இயக்கியிருக்கிறேன். விளம்பரப் படங்களைப் பொறுத்தவரை குறைந்த நேரத்திற்குள் கதையைச் சொல்லியாக வேண்டும். மக்களைப் பொருள் வாங்க வைக்க வேண்டும். விளம்பரத்தில் சினிமா நடிகர்கள் நடிக்கும்போது ரீச் அதிகமாக இருக்கும். சூர்யா, சத்யராஜ், சினேகா என்று பல்வேறு நட்சத்திரங்களோடு நான் பணியாற்றியிருக்கிறேன். ஆச்சி மசாலா ஓனரை வற்புறுத்தி அதன் விளம்பரத்தில் நான் நடிக்க வைத்தேன். ஓனர்களை வைத்து விளம்பரத்தை எடுத்தாலும் அவர்களை மக்கள் ரசிக்கும்படி தான் நாங்கள் காட்டுவோம். நல்ல பட்ஜெட் இருந்தால் பிரம்மாண்டமான விளம்பரங்களை எடுக்கலாம். சினேகாவுடைய சிரிப்புதான் மக்களிடம் அவரை அதிகம் கொண்டு சேர்த்திருக்கிறது என்று நினைக்கிறேன். பிரபு சார் ஒரு குழந்தை மாதிரி. அவர் ஷூட்டிங்குக்கு வரும்போது அவர் வீட்டில் இருந்து அனைவருக்கும் சுவையான உணவு வரும்.

 

சத்யராஜ் சாரோடும் பல விளம்பரங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். சூர்யா சாருடன் நான் பணியாற்றிய விளம்பரம் 2 மணி நேரத்தில் எடுக்கப்பட்டது. மாடல்களை வைத்தும் நிறைய வெற்றிகரமான விளம்பரங்களை இயக்கியிருக்கிறேன். பெங்களூரு, பம்பாய் ஆகிய பகுதிகளிலிருந்து மாடல்களை நாங்கள் தேர்ந்தெடுப்போம். இன்று பல நடிகைகள் மாடல்களாக இருந்து வந்தவர்கள் தான். மாடல்களிடம் நல்ல அர்ப்பணிப்பு இருக்கும். மாடல்களில் பல குழந்தைகளும் அடக்கம். விளம்பரத்தில் சின்னச் சின்ன கிளாமர் விஷயங்கள் இருக்கும்போது அது எளிதில் மக்களைச் சென்றடையும். தமன்னா, அஞ்சலி போன்றோரை ஆரம்ப காலத்திலேயே அடையாளம் கண்டு விளம்பரங்களில் நடிக்க வைத்தேன். அஜித் சாரோடு எனக்கு நல்ல பழக்கம் இருக்கிறது. ஆனால் அவருக்கு விளம்பரங்களில் நடிக்க ஈடுபாடு இல்லை. நல்ல மனிதர் அவர். என்னுடைய விளம்பரங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். விளம்பரங்களிலேயே அதிக நேரம் ஈடுபடுவதால் குடும்பத்தினரோடு அதிகம் நேரம் செலவிட முடியாது. 

 

கர்நாடகாவில் படையப்பா பட ஷூட்டிங்கின் போது வாட்டாள் நாகராஜ் கும்பல் ரஜினி சாரைத் தாக்க முயற்சித்தது. அப்போது நான் அவரை அருகிலிருந்து பாதுகாத்தேன். அன்று என்னுடைய செயலால் அவர் மிகவும் மனம் நெகிழ்ந்து எனக்கு முத்தமிட்டார். சிட்டிசன் படத்தில் நடித்தபோது அஜித் சார் தோளில் கைபோட்டு நண்பர் போல பழகுவார். சினிமா இயக்க வேண்டும் என்கிற ஆசையும் இருக்கிறது. அதற்கான கதைகளும் வைத்திருக்கிறேன். விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...