Skip to main content

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகும் நடிகை ரம்யா!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020

 

vj ramya


பிரபல தொகுப்பாளரான ரம்யா, மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனையடுத்து ஒருசில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.
 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கும் 'மாஸ்டர்' படத்திலும் நடிக்கிறார். ட்வீட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வருபவர் ரம்யா. தற்போது சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், "சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளப்போகிறேன். எல்லாம் நன்மைக்கே. இந்த லாக்டவுனின் கடைசி வாரத்தை மெதுவாகக் கழிக்க விரும்புகிறேன். கவலைப்பட வேண்டாம், நான் முற்றிலும் நலமுடன் இருக்கிறேன். ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன். அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"விரைவில் சந்திப்போம்" - நடிகை ரம்யா

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

ramya aka Divya Spandan about passed away issue

 

தமிழில் சிம்புவின் குத்து படம் மூலம் அறிமுகமான நடிகை ரம்யா, தொடர்ந்து கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். திவ்யா ஸ்பந்தனா என்ற பெயர் கொண்ட இவர் திரையில் ரம்யா என்ற பெயரை பயன்படுத்தி பின்னர் தனது பெயரிலேயே நடித்து வந்தார்.

 

கன்னடத்தைச் சேர்ந்த இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த 2012ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர், 2013 ஆம் ஆண்டு மண்டியா மக்களவைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

 

பிறகு அரசியலில் அதிக கவனம் செலுத்தி வந்த ரம்யா 2016க்குப் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ரோஹித் பதகியின் 'உத்தரகாண்டா' என்ற கன்னடம் படம் மூலம் மீண்டும் திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கயிருந்தார் ரம்யா. படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்த பின்பு அவர் நலமுடன் இருப்பதாகவும், இறந்ததாக வந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டன. 

 

மேலும் அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் இருப்பதாகத் தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை அவரது தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு கீழ் ‘விரைவில் நம்ம ஊரில் சந்திப்போம்’ என நடிகை ரம்யா கமெண்ட் செய்துள்ளார்.   

 

 

Next Story

நடிகை ரம்யாவிற்கு என்ன ஆச்சு? - தோழி பகிர்ந்த உண்மை

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Actress Ramya is doing well

 

பிரபல நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பியுமான நடிகை ரம்யா மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்து வந்தனர். 

 

இந்த நிலையில், நடிகை ரம்யா நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரம்யாவிற்கு நெருக்கமானவர்களுக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தற்போது நலமுடன் இருப்பதாகவும் இது தவறான செய்தி என்றும் மறுத்துள்ளனர். மேலும் ரம்யாவின் தோழியும் பத்திரிகையாளருமான சித்ரா சுப்ரமணியம் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தற்போது ரம்யாவுடன் பேசியதாகவும், அவர் நாளை ஜெனிவாவில் இருந்து பிராக் நாட்டிற்குச் செல்வதாகவும் அதன் பிறகு அவர் பெங்களூரு திரும்புவார் என்றும் பதிவிட்டுள்ளார்.

 

நடிகை ரம்யா, தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரம்யா, எம்.பியாகவும் இருந்துள்ளார்.