Actress vj Chitra Death Case - Court Order

சின்னத்திரை நடிகையான சித்ரா, கடந்த 2020- ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது. இதனிடையே தனக்கு எதிராக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f7cd22da-c6a8-4986-9858-d822fcde7ad8" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_34.jpg" />

Advertisment

இந்நிலையில் ஹேம்நாத்தின் மனு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என ஹேம்நாத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார். மேலும் விசாரணையை விசாரணை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவும் என உத்தரவிட்டுள்ளார்.