Skip to main content

கெளதம் மேனன்-விஜய் சேதுபதி கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

actress varalaxmi sarathkumar joins Michael movie

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி படங்கள் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் நடித்துவருகிறார்.  இதனிடையே இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்திலும்  நடித்துவருகிறார். 

 

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் 'மைக்கேல்' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில், இயக்குநர் கெளதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து கரண் சி. ப்ரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. 

 

இந்நிலையில் மைக்கேல் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்க உள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

“குறைகளைக் கண்டறிவதை நிறுத்துங்கள்” - வரலட்சுமி சரத்குமார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
varalkshmi sarathkumar explained about smk party joined bjp issue

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. 

அந்த வகையில் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். பின்பு தனது கட்சியை, பாஜகவுடன் திடீரென்று இணைத்தார். அவரும் பா.ஜ.க.வில் இணைந்தார். சரத்குமாரின் இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதற்கு விளக்கமளித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “என்னை பொறுத்தவரை யாரையும் தரக்குறைவாக பேசியது இல்லை. மனைவியிடம் கருத்து கேட்டதினால் என்னை விமர்சனம் செய்கின்றனர். மனைவியிடம் கருத்து கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்கள்?.  இது மாதிரியான கருத்துகளுக்கு நான் செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார். 

இதனிடையே, பா.ஜ.கவில் தனது கட்சியை சரத்குமார் இணைத்தது பின்னால் சரத்குமாரின் மகள் வரலட்சுமி இருப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு, என்.ஐ.ஏ சோதனையில் கேரளத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஆதிலிங்கம் என்ற நபர் வரலட்சுமியிடம் குறிப்பிட்ட காலம் உதவியாளராக பணியாற்றியிருந்தார். இது தொடர்பாக வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த வரலட்சுமி, சம்மன் வரவில்லை என்றும், ஆதிலிங்கம் பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தார். இதன் காரணமாக வரலட்சுமி மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு இருப்பதாகவும் இதில் தப்பிப்பதற்காக கட்சியை பா.ஜ.க-வில் இணைத்ததாகவும் செய்திகள் வெளியாகி வந்தது. 

இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் அந்த செய்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நமது ஊடகங்களில் பழைய போலிச்செய்திகளை பரப்புவதை விட எந்த செய்தியும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பிரபலங்களிடம் குறைகளை கண்டறிவதை நிறுத்துங்கள். நாங்கள் நடிக்கவும், மக்களை மகிழ்விக்கவும், எங்கள் வேலையைச் செய்யவும் முயற்சிக்கிறோம். அதே போல் உங்கள் வேலையை நீங்கள் ஏன் செய்யக்கூடாது. உண்மையிலேயே கவனிப்பதற்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கிறது. எங்களது மௌனத்தை பலவீனத்தின் அடையாளமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவதூறு வழக்குகளும் இப்போது டிரெண்டிங்கில் உள்ளன. பொய்யான ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.