ADVERTISEMENT

கரோனாவால் தந்தையை இழந்த பிரபல நடிகை...

11:33 AM Mar 24, 2020 | santhoshkumar

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 16,500 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 பேர் ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அண்டர்வேர்ல்ட், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஷோபியா மைல்ஸின் தந்தை கரோனா வைரஸால் இறந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், எனது தந்தை சில மணி நேரங்களுக்கு முன் மரணமடைந்தார். இறுதியில் என் தந்தையை எடுத்துக்கொண்டது கரோனா வைரஸ் என்று தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT