Skip to main content

பிரபல நடிகை மீது குற்றச்சாட்டு வைக்கும் ஸ்வீட்டி!

Published on 11/07/2020 | Edited on 11/07/2020

 

sweety

 

இந்த லாக்டவுனில் பல படங்களை இயக்கி வரும் ராம் கோபால் வர்மா, 'நேக்ட்' என்றொரு படத்தையும் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்டரிலிருந்து, அனைத்துமே சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 

 

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயினாக நடித்திருக்கும் ஸ்வீட்டி, முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷி கண்ணாவை விமர்சித்துப் பேசியுள்ளார்.

 

அதில், “சுப்ரீம்' படத்தின் ஷூட்டிங்கின்போது அதிகாலை 3 மணிக்கு ராஷி கண்ணாவுக்கு புடவை கட்டிவிட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். உடனே கிளம்பி படப்பிடிப்புக்குச் சென்றேன்.

 

அப்போது நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டர், "ஏன் இந்த நேரத்தில் வந்தாய். இங்கு தான் இவ்வளவு பெண்கள் இருக்கிறார்களே. அவர்கள் கட்டிவிடுவார்களே" என்று கேட்டார். நீண்ட தூரம் பயணித்துப் படப்பிடிப்புக்குச் சென்றேன்.

 

இதே போன்று பல முறை என்னை காக்கவைத்துள்ளார் ராஷி கண்ணா. இதன் மூலம் எனது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார் 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரையை கிழித்த ரசிகர்கள்; நடிகையை பாதுகாப்பாக வெளியேற்றிய தனுஷ் 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Theater Screen Tearing Dhanush Fans

 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

 

இந்நிலையில் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கத்தின் திரை ரசிகர்களால் கிழிக்கப்பட்டுள்ளது. திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருந்த போது தாய் கிழவி பாடலுக்கு ரசிகர்கள் ஸ்க்ரீன் முன்பு எழுந்து ஆடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக திரையரங்கு ஸ்க்ரீன் கிழந்ததாக கூறப்படுகிறது. 

 

இதனிடையே சென்னையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திருச்சிற்றம்பலம் படத்தின் அதிகாலை காட்சியை நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் ஆகியோர் படக்குழுவினருடன் பார்த்துள்ளனர். திரையரங்கில் தனுஷ்யை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் விசிலடித்து கரகோஷத்தை எழுப்பினர். மேலும், படம் முடிந்து தனுஷ் உட்பட படக்குழுவினர் வெளியேறினர். அப்போது, தனுஷ் தனது காரை நோக்கி செல்லும் வழியில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அப்போது, தனுஷுடன் அங்கு நடிகை ராஷிகண்ணாவும் உடனிருந்தார். வெளியே ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்ததால், பதட்டமடைந்த தனுஷ் அங்கிருந்த  ராஷிகண்ணாவையும் அவருடன் சேர்த்து பத்திரமாக வெளியேற்றினார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Next Story

தனுஷ் படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்த உதயநிதி

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

udhayanidhi stalin said thiruchitrambalam movie release july1

 

செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இப்படம் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட  நிலையில் தற்போது இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.