ADVERTISEMENT

நடிகை தற்கொலை வழக்கு; 3 செல்போன், 1 டேப் மீட்பு, தீவிர விசாரணையில் போலீஸ்

12:11 PM Sep 23, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த நடிகை பவுலின் எனும் தீபா (29), கடந்த 18ஆம் தேதி அவரது அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனிடையே வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

இதனைத் தொடர்ந்து நடிகை தீபாவின் அறையை போலீசார் சோதனை செய்த போது, அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இந்நிலையில் நடிகை தீபாவின் காணாமல் போன ஐபோன் மீட்கப்பட்டுள்ளது. அந்த போனை தீபா தற்கொலை செய்துகொண்ட பிறகு முதல் ஆளாய் கதவை திறந்து பார்த்த பிரபாகரனிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் தீபா பயன்படுத்திய 3 செல்ஃபோன்கள் 1 டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன. அந்த ஐபோனில் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எதுவும் அழிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடயவியல் ஆய்வுக்கு போலீசார் உட்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீசார் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அந்த விசாரணையில் தீபாவின் காதலனாக கூறப்படும் சிராஜூதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாக சிராஜூதீனிடம் தீபா வாக்குவாதம் செய்ததாகவும், அதனை தொடர்ந்து சிராஜூதீன் தம்மை உடனடியாக தீபா வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியதாக தெரிவித்தார்.

இதனையடுத்து கோயம்பேடு போலீசார், சிராஜூதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் தீபா தற்கொலை செய்துகொண்ட வீட்டிலிருந்த சில நகைகள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT