Published on 30/04/2020 | Edited on 30/04/2020

தமிழ் சின்னத்திரை நாடகத்தில் நடித்து பிரபலமான நடிகை பிரவீனா, லாக் டவுன் சமயத்தில் தனது யூ-ட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் தனது வீட்டிற்குள் நுழைந்த சிறிய பாம்பை, பாம்பு பிடிப்பவரின் உதவியுடன் பிடித்து கையிலெடுத்து விளையாடியுள்ளார்.
பாம்பு பிறந்து சில நாட்களே ஆகியுள்ளதால் அதன் காரணமாக பாதிப்புகள் மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது. மேலும் பாம்புகளின் வகைகளை பொறுத்து ஆபத்துகள் இருக்கும் என்று அவர் விளக்குகிறார்.
இவர் தீரன் அதிகாரம் ஒன்று, கோமாளி, சாமி 2 உள்ளிட்ட ஒருசில தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.