“அவர் போலீஸாரிடம் பொய் சொல்கிறார்” -நடிகை பாயல் கோஷ்

payal gosh

பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் மீது சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு எதிராக இந்தி நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதனையடுத்து இந்தி திரையுலகம் பரபரப்பானது. இதுகுறித்து, அனுராக் காஷ்யப் மறுப்புத் தெரிவித்த நிலையிலும் இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. மேலும் அனுராக் காஷ்யப்பிற்கு ஆதரவாக, அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி கல்கி ஆகியோர் கடிதம் வெளியிட்டுள்ளனர்.

அதேபோல அனுராக் காஷ்யப்புடன் ஒன்றிணைந்து வேலை பார்த்த ஹீரோயின்கள் மற்றும் பெண் பணியாளர்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், பலரும் அவருக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ், மும்பை, வெர்ஸோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரையடுத்து அனுராக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அனுராக் காஷ்யப் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை தொடர்ந்து இயக்குனர் காஷ்யப்பிடம் விசாரணை மேற்கொள்ள வெர்ஸோவா காவல் நிலையம் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அக்டோபர் 1ஆம் தேதி விசாரணையில் கலந்துகொண்டார். அப்போது, தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று போலீஸாரிடம் அனுராக் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் அனுராக் சமர்ப்பித்துள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் ப்ரியங்கா கிமானி கூறியுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நடிகை பாயல் கோஷ், “போலீஸாரிடம் தனது வாக்குமூலத்தில் அனுராக் காஷ்யப் பொய் கூறியிருக்கிறார். அவருக்குபோதைப்பொருள் பரிசோதனை,உண்மையைக் கண்டறியும் சோதனை எனது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான புகாரை விரைவில் போலீஸாரிடம் அளிக்கவுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

anurag kashyap
இதையும் படியுங்கள்
Subscribe