Skip to main content

நடிகை பார்வதி அம்மா அமைப்பிலிருந்து ராஜினாமா...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

parvathy

 

 

பாவனா வழக்கிற்கு பிறகு அந்தச் சங்கம் இரண்டாக உடைந்தது. இருந்தாலும் இந்தச் சங்கத்தில் தொடர்ந்து இயங்கி வந்தார் பார்வதி. இதன்பின் 'ட்வெண்டி 20' என்ற திரைப்படத்தை தயாரித்தது அம்மா சங்கம். அதன் இரண்டாம் பாதியை தயாரித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்திலும் பாவனா நடிப்பாரா என்று அம்மா சங்கத்தின் பொதுச்செயலாளர் எடவேலா பாபுவிடம் அண்மையில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “பாவானா, அம்மாவில் தற்போது இல்லை. முதல் பாகத்தில் சிறப்பாகப் பணியாற்றியிருந்தார். ஆனால், இறந்த ஒன்றை மீண்டும் கொண்டுவருதல் சரியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து, பார்வதி ஃபேஸ்புக்கில் மிகவும் கோபமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “2018 -ஆம் ஆண்டு, என்னுடைய நண்பர்கள் பலர் அம்மாவில் இருந்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு சிலராவது உடைந்துபோன அமைப்பை சீர்படுத்த அங்கே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், சமீபத்தில் பாபு பேசிய அந்த வார்த்தைகள், என்னுடைய அனைத்து நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டது. இந்த அமைப்பால் முழுமையாக ஒதுக்கப்பட்ட ஒரு பெண்ணை, இறந்தவருக்கு சமமாகக் கூறுவது அறுவருக்கத்தக்கதாக இருக்கிறது. இந்த அமைப்பில் இருந்து விலகுகிறேன். இது போன்ற மோசமான கருத்துகளைப் பதிவு செய்த பாபு பதவி விலக வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

 

இந்தக் கருத்துகளைக் கண்டித்து சங்கத்திலிருந்து ராஜினாமா செய்வதாக நடிகை பார்வதி ஏற்கனவே அறிவித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சங்கத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் பார்வதியின் ராஜினாமாவை சங்கம் ஏற்றுக்கொண்டது. மேலும், எடவேல பாபுவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்திய மக்களாகிய நாங்கள்...” - ஒன்று திரண்ட மலையாளத் திரையுலகினர்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
malayalam actors shared indian constitution page in his social media

உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவியுள்ளார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். 

அந்த வகையில் ரஜினி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராம் சரண், அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், கத்ரினா கைஃப், கங்கனா ரணாவத் எனத் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் விஷால் உள்ளிட்ட சில திரைப் பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் மலையாள திரைப் பிரபலங்களான பார்வதி, இயக்குநர் ஜோ பேபி, நடிகர் ஆஷிக் அபு உள்ளிட்ட பலர், அரசியலமைப்பு சாசனத்தின் முகப்பு பக்கத்தை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

அதில், “இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியாவை (இறையாண்மை சோசலிஸ்ட் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு) நாடாகவும் மற்றும் அனைத்து குடிமக்களையும் பாதுகாப்பதற்கு உறுதியுடன் தீர்மானித்துள்ளோம்” என சகோதரத்துவம், சமத்துவம், சுதந்திரம், நீதி என்ற குறிப்புகள் அடங்கிய பக்கம் இடம் பெற்றுள்ளன. 

Next Story

வலுக்கும் எதிர்ப்பு - நயன்தாராவிற்கு ஆதரவாக பார்வதி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
parvathy about nayanthara annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அவர் கொடுத்த புகார் மனுவில், “இந்து அர்ச்சகரின் மகள் பிரியாணி சமைப்பதற்காக நமாஸ் செய்கிறார். லவ் ஜிகாத் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஃபர்ஹான் கதாபாத்திரம் (ஜெய்), ராமரும் இறைச்சி உண்பவர் என்று கூறி கதாநாயகியை இறைச்சி சாப்பிடும்படி வற்புறுத்துகிறார். ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி நடக்கவுள்ளதால், இந்து மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டு நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் மேல் வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மேல் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் இந்து அமைப்பை சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் என பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே அன்னபூரணி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஜீ ஸ்டூடியோஸ், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இடம்பெறாது எனவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் படத்தின் இணை தயாரிப்பாளர்கள் என்ற முறையில் எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. அந்தந்த சமூகத்தினரின் உணர்வுகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் புண்படுத்தப்பட்டதற்கும் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம் எனவும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினருக்கு கடிதம் எழுதியிருந்தது. 

இந்த நிலையில் அன்னபூரணி படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நீக்கபட்டதற்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டு தணிக்கை செய்வது குறித்து விமர்சித்துள்ளார்.