Advertisment

நடிகை நிக்கி கல்ராணி கரோனாவால் பாதிப்பு!

v

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Advertisment

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. இதற்கு அடுத்த இடத்தில் தமிழகம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான கரோனா பாதிப்புகளைக் கடந்து சென்று கொண்டிருக்கின்றது. தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் புதிய வேகம் எடுத்துள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுநர், முதலமைச்சர் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரையும்பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe