Skip to main content

“சிவனும் சக்தியும் நானே” - தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை

Published on 20/08/2022 | Edited on 20/08/2022

 

actress Kanishka Soni who married herself

 

 


 

பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்ற பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டு பலரையும் ஆச்சரியப்படுத்தினார். 

 

இந்நிலையில் பவித்ரா ரிஷ்தா மற்றும் தியா அவுத் பாத்தி ஹம் உள்ளிட்ட இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கனிஷ்கா சோனி. சமீபத்தில் நடிகை கனிஷ்கா சோனி நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலி அணிந்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் இது ஏதாவது சீரியலுக்கான கெட்டப்பா அல்லது உண்மையாகவே திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பியிருந்தனர். 

 

இதற்கு நடிகை கனிஷ்கா சோனி தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளேன் என்று பதிலளித்துள்ளார். மேலும் நான் காதலிக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். எனது கேள்விக்கான பதில் என்னிடமே உள்ளது. எனக்கென்று ஒரு ஆண் துணை தேவையில்லை. நான் எனது கிட்டருடன்(இசைக்கருவி) இருக்கும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். நான் தெய்வம் சிவன், சக்தி இரண்டும் என்னுள் இருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இது அவரது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியது. 

 

இதனைத்தொடர்ந்து வீடியோ வெளியிட்டு பேசிய கனிஷ்கா, "என்னுடைய திருமண முறை குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்திய கலாச்சாரத்தை அவமதிக்கவில்லை. திருமணம் என்பது வெறும் உடலுறவு கொள்வது மட்டும் அல்ல. அதில் அன்பும், நேர்மையும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் இருப்பதாக எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நினைத்தபடி என் வாழ்நாளில் இது வரை எந்த ஒரு ஆணையும் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்தான் தனியாக வாழ முடிவு செய்து என்னையே நான் திருமணம் செய்து கொண்டேன். சிலர் என்னுடைய பதிவை பார்த்துவிட்டு போதையில் பேசுவதாக கூறுகிறார்கள். அப்படி இல்லை நான் முழு மனதுடன் தான் இந்த முடிவை எடுத்தேன். தற்போது ஹாலிவுட் பக்கம் கவனம் செலுத்தி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.