பிரபல நடிகையின் 5ஜி வழக்கு; அபராத தொகையை குறைத்த உயர்நீதிமன்றம்

actress Juhi Chawla 5g case reduces fine delhi high court

1984ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றஜூஹி சாவ்லா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஜூஹி சாவ்லா தற்போது ஷாருக்கானுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணியின்முதலீட்டாளர்களில்ஒருவராகஇருந்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ஜூஹி சாவ்லா இந்தியாவில் 5ஜிசேவை அமல்படுத்தப்பட்டால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கக்கூடும் எனக் கூறி அதை தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடுநடிகை ஜூஹி சாவ்லாவிற்குரூ.20 லட்சம் அபராதம் விதித்தது.

இதனைத்தொடர்ந்து அபராதத்தை குறைக்க கோரி ஜூஹி சாவ்லா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனைவிசாரித்த உயர்நீதிமன்றம் அபராத தொகையை ரூ.2 லட்சமாக குறைத்ததுடன், நீதிபதி கூறிய கடுமையான வார்த்தைகளையும் நீக்கி உத்தரவிட்டது.

5g delhi high court Juhi Chawla
இதையும் படியுங்கள்
Subscribe