Skip to main content

"அதற்கு நான் தடையாக இருக்க மாட்டேன்" - சர்ச்சை குறித்து பாவனா வேதனை

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

actress bhavana explained about his costume controversy

 

நடிகை பாவனா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மலையாளத்தில்  'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகம் பாவனாவுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்தது. அந்த விழாவில் பாவனா அணிந்துவந்த உடை குறித்து பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிராக விமர்சித்து வந்தனர். அது சற்று சர்ச்சையையும் ஏற்படுத்தியது.   

 

இந்நிலையில் பாவனா இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தனது சமூக வலைதளபக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,"வெறும் டாப் மட்டும் அணிந்து வெளியே போகும் நபர் அல்ல நான். என் சருமத்தின் நிறத்தில் உள்ளே ஆடை அணிந்திருந்தேன். மற்றபடி இவர்கள் குறிப்பிடுவது போல நான் ஆடைக்கு உள்ளே (Skin dress)  இல்லாமல் ஆடை அணியவில்லை. இந்த வகை உடைகளை பயன்படுத்தியோருக்கு இது தெரியும்" என பதிவிட்டுள்ளார்.  

 

மேலும்  "நான் கவலைப்பட வேண்டாம் என்று எண்ணி என் துக்கங்களை ஒதுக்கி வைக்க முயலும்போது, ​​என்னைக் குறை சொல்லவும், புண்படுத்தவும் இங்கு பலர் இருக்கிறார்கள். மீண்டும் என்னை இருளில் தள்ள பார்க்கிறார்கள். இது போன்ற செயல்கள் மூலம் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றால் நான் அதற்கு தடையாக இருக்க மாட்டேன்" என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மிகவும் பயமாக உள்ளது” - பாவனா வேதனை

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
bhavana about his case

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதையடுத்து சமீப காலமாக மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ச்சியாக மலையாள மற்றும் கன்னடப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக இவர் நடிப்பில், கேஸ் ஆஃப் கொண்டனா என்ற கன்னடப் படம் கடந்த ஜனவரி 26ஆம் தேதி வெளியானது. இப்போது பிங்க் நோட் என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் ஹண்ட், நடிகர், தி டோர் என்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் நடிகர் மற்றும் தி டோர் தமிழிலும் வெளியாகவுள்ளது.   

இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில், “இது அநியாயம் மற்றும் அதிர்ச்சி” என்ற தலைப்பில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பு பலமுறை மாற்றப்பட்டு இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நீதிமன்றத்தில் எனது தனியுரிமை தற்போது பாதுகாப்பாக இல்லை. இதை அறிந்து மிகவும் பயமாக உள்ளது. பாதிக்கப்பட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இப்படியொரு அசம்பாவிதம் நடப்பது வேதனைக்குரியது.

இருப்பினும், நேர்மையான நீதிபதிகளின் காலம் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையுடன், எனக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டத்தை தொடர்வேன். ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடைசித் தூணாக இருக்கும் நமது நீதித்துறையின் புனிதம் பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையுடன் எனது பயணத்தைத் தொடர்வேன்” என குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 2017ல் பாவனா, தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக புகார் கொடுத்தார். அந்த வழக்கில், மலையாள நடிகர் திலீப் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கில் சாட்சியமாக மெமரி கார்டு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா

Published on 09/02/2023 | Edited on 09/02/2023

 

bhavana makes his re entry after 12 years in tamil industry

 

தமிழில் ‘சித்திரம் பேசுதடி’, 'வெயில்', 'தீபாவளி', 'ஜெயம்கொண்டான்' என பல ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் பாவனா. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வந்த பாவனா அவருடைய தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தொடர்ச்சியாக நடிக்க முடியாமல் போனது. 

 

இதையடுத்து தற்போது மீண்டும் பழையபடி நடிக்கத் தொடங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் 'என்டிக்கக்கொரு பிரேமாண்டார்ன்னு', 'ஹண்ட்' மற்றும் கன்னடத்தில் 'பிங்க் நோட்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

 

இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தில் கணேஷ் வெங்கடராமன் நடிக்க கதாநாயகியாக பாவனா நடிக்கிறார். இப்படம் ஹாரர் ஜானரில் உருவாவதாகவும் இயக்குநர் ஜெயதேவ் இப்படத்தை இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஜெயதேவ் இதற்கு முன்பாக கலையரசன் நடிப்பில் 2018ல் வெளியான 'பட்டினப்பாக்கம்' படத்தை இயக்கியுள்ளார். 

 

பாவனா, கடைசியாக அஜித்தின் 'அசல் ' படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் தமிழில் நடித்து வருவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.