Skip to main content

தொடர் ஒர்க் -அவுட், அஞ்சலியின் நியூ லுக்!

Published on 02/04/2018 | Edited on 03/04/2018
anjali


பலூன் படத்திற்கு பிறகு நடிகை அஞ்சலி தற்போது தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து, விஜய் ஆண்டனி ஜோடியாக காளி படத்திலும் நடித்து முடித்துள்ளார். இவ்விரு படங்களும் விரைவில் வெளியாக இருக்கின்ற நிலையில் அஞ்சலி தற்போது சசிகுமாருடன் நாடோடிகள்-2 படத்திலும், குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் குண்டாக காணப்பட்ட அஞ்சலியை டைரக்டர்கள் பலரும் அடுத்தடுத்து நடிக்கும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைக்கும்படி வற்புறுத்தினர். இதையடுத்து அவர் சமீபத்தில் ஒல்லியான தோற்றத்திற்கு மாறினார். இதற்காக கடுமையான உடற்பயிற்சியும் செய்து வருகிறார். மேலும் இதை தக்கவைத்துக்கொள்ள ஜிம்மிலேயே நீண்ட நேரம் செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அஞ்சலி ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

'புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லுவது என்னவென்றால்...' - அஞ்சலி 

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

அஞ்சலி நடிப்பில் அடுத்ததாக நாடோடிகள் 2, லிசா, சிந்துபாத் ஆகிய படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தன்னை சுற்றி வரும் வதந்திகள் குறித்து நடிகை அஞ்சலி பேசியபோது...

 

Anjali

 

"நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை. திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும். நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை" என்றார்.

 

Next Story

"பேரன்பு படத்தின் ஒவ்வொரு காட்சியும் நிஜம்"

Published on 12/02/2019 | Edited on 12/02/2019

42 வயது சிறப்பு பெண் குழந்தையின் தாய் மரியா, தன் குழந்தையின் நிலையை கண்டபிறகு அதைக்குறித்து தேடிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒருகட்டத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான அமைப்புகளில் பணியாற்றி, பின் தனியாக சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியையே துவங்கியிருக்கிறார். தன் மகளுடன் பேரன்பு படத்தை பார்த்த மரியா, திரைப்படம் குறித்தும் அதன் மீது வைக்கப்படுகின்றன விமர்சனங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட நேர்காணல் இது.