Skip to main content

“ஒரு பக்கம் மட்டும் பார்க்கக் கூடாது... ஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு” - கலாஷேத்ரா விவகாரம் குறித்து அபிராமி

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

actress Abhirami Venkatachalam about Kalakshetra college issue

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த விவகாரம் பரவலாகப் பேசப்பட, இந்தப் புகார் தொடர்பாக அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் மீது போலீசார், மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி லத்திகா சரண் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்த நிலையில் இந்த பிரச்சனை குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகை அபிராமி இந்த விவகாரம் குறித்து பேசுகையில், "பொதுவாக எந்தவொரு வன்கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமலே குரல் கொடுப்பேன். நானும் கலாஷேத்திரா கல்லூரியில் படித்தவள் தான். அந்த கல்லூரியின் முன்னாள் மாணவி நான். எனக்கு இந்த விவகாரத்தில் பேச விருப்பமில்லை. ஏனென்றால் எப்போதுமே பிரச்சனையின் ஒரு பக்கம் மட்டுமே பார்க்கக் கூடாது. நிறைய பேர் அதை மட்டுமே பார்த்து கருத்து சொல்கிறார்கள். 89 வருஷமா இந்த கல்லூரியில் இதுபோன்று ஒரு பிழை சொல்வதற்கு எதுவுமே நடக்கவில்லை. ஆனால் இப்போது யார் யாரோ கலாஷேத்திரா எப்படி இருக்கும் என என்னிடம் கேட்கிறார்கள். கலாஷேத்திரா என்ற பெயரை கூட சரியாக உச்சரிக்க தெரியாதவர்கள், கல்லூரியை பற்றி தவறாக சொல்கிறார்கள். அது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. நான் ஒரு முன்னாள் மாணவியாக சொல்கிறேன். கலாஷேத்திரா கல்லூரி குறித்து அவதூறு பரப்பக்கூடிய வேலை தான் தற்போது நடைபெற்று வருகிறது. 

 

என்ன நடக்கிறது என்று எங்களுக்கே ஒன்னும் புரியவில்லை. ஒரு பக்கத்தின் பார்வையை மட்டுமே வைத்து இவர்கள் இப்படித்தான் என்ற முடிவுக்கு எப்படித்தான் உறுதியாக வருகிறார்கள் என்று புரியவில்லை. நான் கல்லூரியின் இயக்குநர் ரேவதி மேடம் பக்கம்தான் நிற்பேன். அவர்கள் சமீபத்தில் தான் இயக்குநராக பொறுப்பேற்றவர். இந்த பிரச்சனை 10 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது என எல்லாரும் சொல்கிறார்கள். அப்போது ரேவதி இயக்குநர் கிடையாது. இப்போது எல்லா பிரச்சனைக்கும் ரேவதியை குற்றம் சாட்டுகிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. இதுபோன்று நிறைய கேள்விகள் இருக்கிறது. அந்த ஆசிரியருக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்பதை அறிய அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் தெரியும். சொல்லப் போனால் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கு. மனைவி மற்றும் ஒரு பொண்ணும் இருக்கு. அவங்க பற்றி யாருமே நினைக்கவில்லை. நிறைய இடத்தில் நாங்க பெருமையாக பார்த்த ஆசிரியர்களை ரொம்ப இழிவுபடுத்தி பேசியிருக்காங்க. பல நல்ல விஷயங்களுக்கு சென்றுகொண்டிருந்த கல்லூரி இது. எந்த துன்புறுத்தலாக இருந்தாலும் நடந்த நேரத்திலேயே வெளிப்படையாகப் பேச வேண்டும்.

 

ஒரு தவறு நடக்கிறது என்றால் அதை அந்த இடத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அந்த இடத்தை கடந்து வந்துவிட்டு, நான் பயந்துட்டேன்; எங்க போய் சொல்லவேண்டும் என்று தெரியல என சொல்லக்கூடாது. நமக்கு சப்போர்ட் பண்ண ஆள் இல்லாமல் இருப்பதற்கும் அல்லது நம்ம அப்பா அம்மாவே நம்மளை கேள்வி கேப்பார்களோ என்று யோசிக்க இது 1980ஸ் காலகட்டம் கிடையாது. உங்களுக்கு எல்லா சப்போர்ட்டும் இருக்கு. நமக்கு நடக்கிற விஷயத்தை தைரியமாக சொல்வது என்பதுதான் முக்கியம். அது உண்மையாகவும் இருக்க வேண்டும். அது உண்மையாக இருந்தால் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. இங்கு அதுதான் பிரச்சனை. இங்கு நிறைய விஷயங்களை மறைச்சி நமக்கு சாதகமாக பேச வேண்டும் என்று மாத்தி மாத்தி பேசுவதனால் தான் நிறைய பிரச்சனை உருவாகிறது. நம்ம பக்கம் உண்மை இருந்தால் நம்ம மாநிலம் கண்டிப்பாக அதை பார்க்கும். கண்டிப்பா அதை நிராகரிக்க மாட்டார்கள்" என்றார். 

 

பெண்களின் கைகளை கூட அவர்களின் அனுமதி இல்லாமல் தொட்டால்... அதுவும் குற்றமே என அஜித் பேசிய வசனம் இடம்பெற்ற 'நேர்கொண்ட பார்வை' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் அபிராமி. அந்த படத்தில் அஜித் பேசிய 'நோ என்றால் நோ' என்ற பெண்களுக்கு ஆதரவான வசனம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.