Skip to main content

ரசிகர் மன்றத்திலிருந்து முதல்வர் கனவு - இதுவரை கட்சி ஆரம்பித்த நடிகர்கள்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
actors started political party list

திரைத்துறையில் பயணிக்கும் ஹீரோக்கள், தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றி பின்பு அதனை அரசியல் கட்சியாக மாற்றி வருவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகம் என்று கட்சிக்கு பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தார். மேலும் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில், இதுவரையில் நடிகர்களாக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு. எம்.ஜி.ஆர், 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். சிவாஜி 1989ஆம் ஆண்டு, தமிழக முன்னேற்ற முன்னணி, இயக்குநர் மற்றும் நடிகரான பாக்கியராஜ் 1989ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம், டி.ராஜேந்தர் 1991ஆம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம், விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம், நடிகர் சரத்குமார் 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்தி 2009ஆம் ஆண்டு நாடாளும் மக்கள் கட்சி, நடிகர் கருணாஸ் 2016ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை, கமல்ஹாசன் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம், மன்சூர் அலிகான் 2021ஆம் ஆண்டு இந்திய ஜனநாய புலிகள் ஆகியவை அதன்பின் ஆரம்பிக்கப்பட்ட கட்சிகளாகும். 

இந்த லிஸ்டில் அனைவரும் முதல்வர் கனவை நோக்கி ஆரம்பித்தனர். அதில் எம்.ஜி.ஆர் மட்டும் முதல்வர் கனவை அடைந்துள்ளார். அதன் பிறகு வந்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக முன்னேறினார். இதைத் தவிர்த்து பலரும் எம்.எல்.ஏவாக மட்டுமே உயர்ந்தனர். சிலர் அந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கின்றனர். இந்த சூழலில் கட்சி ஆரம்பித்துள்ள விஜய், எந்தளவிற்கு முன்னேறுவார் என்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.