Skip to main content

நடிகர்களுக்கு சம்பள கட்டுப்பாடு... தயாரிப்பாளர் சங்கம் முடிவு?

Published on 01/05/2018 | Edited on 02/05/2018
vishal


கடந்த மார்ச் மாதம் ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் சமீபத்தில் நிறைவடைந்ததையொட்டி சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் படிப்படியாக ஆரம்பித்து களைகட்ட தொடங்கிவிட்டன. ஸ்ட்ரைக் முடிவடைந்த நாள் அன்று டிஜிட்டல் சேவை, டிக்கெட் முன்பதிவு கட்டணங்களை குறைப்பது, டிக்கெட் விற்பனையை கம்ப்யூட்டர் மயமாக்குதல் என்று பல விஷயங்களை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நடைமுறைக்கு கொண்டு வருவதாக அறிவித்திருந்தார். மேலும் நடிகர், நடிகைகளின் சம்பள குறைப்பு பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். தமிழ் சினிமாவில் நடிகர்கள் அதிகபட்சமாக ரூ.50 கோடியும் நடிகைகள் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வாங்குவதாக குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக உள்ளது. மேலும் பெரிய பட்ஜெட் படங்களின் பட்ஜெட்டில் பெருந்தொகை நாயகர், நாயகிகளின் சம்பளமாகத் தான் போகிறது. மேலும் ஹீரோக்களுக்கு அவர்களது முந்தைய படத்தின் வெற்றியை வைத்து மார்க்கெட் நிர்ணயிக்கப்படுகிறது. படங்களின் வசூலை தெளிவாக கணிக்க முடியாததால் வசூல் நிலவரம் பற்றி பல தவறான கணக்கு விவரங்கள் தமிழ் சினிமாவை சுற்றி வருகின்றன. 

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரையரங்குகளை கணினி மயமாக்கும் நடைமுறைக்காக தயாரிப்பாளர் சங்கம் பேசி வருகிறது. அப்படி ஒரு நிலை வந்தால் ஒவ்வொரு கதாநாயகனின் உண்மையான மார்க்கெட் நிலவரம் தெரிய வரும். சம்பளம் அதற்கேற்ப நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். மேலும் இந்தி பட உலகில் சில கதாநாயகர்கள் தங்களது சம்பளத்தில் கால் பகுதியை மட்டும் முன்பணமாக வாங்கிக்கொண்டு படம் வியாபாரம் ஆனபிறகு அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கை பெற்றுக்கொள்கிறார்கள். படம் நல்ல விலைக்கு போனால் அதிக பணமும் குறைந்த தொகைக்கு வியாபாரம் ஆனால் குறைவான பணமும் அவர்களுக்கு கிடைக்கும். இந்த நடைமுறை தமிழ் சினிமாவில் வந்தால் நல்லது என்று தயாரிப்பாளர்கள் கருதி நடிகர் சங்க கூட்டத்தில் இதுகுறித்து பேசப்பட்டது......அப்போது இதற்கு சில நடிகர்கள் உடன்படவில்லை என்றும், மேலும் பல தயாரிப்பாளர்கள் படம் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பின்னரும் கூட சம்பள பாக்கி வைக்கிறார்கள் என்றும், இந்த சூழ்நிலையில் சம்பள முன்பணத்தை குறைவாக வாங்கி எந்த நம்பிக்கையில் நடிப்பது என்று நடிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் தயரிப்பாளர் சங்கம் சார்பில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று நடிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது  நடிகர்,நடிகைகள் சம்பள கட்டுப்பாடுகள் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய முடிவை நடிகர், நடிகைகள் ஏற்பார்களா அல்லது மேல் முறையீடு செய்வார்களா என்று நடிகர் சங்கம் சார்பாக விரைவில் தெரிவிக்கப்படும் என்று திரை உலகில் பரவலாக பேசப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

"இது திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்கியுள்ளது" - அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கண்டனம்!

Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ghgh

 

 

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சினிமா சார்ந்த அனைத்து வேலைகளும் மத்திய அரசின் உத்தரவின் படி இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புகள் மற்றும் பின்னணி வேலைகள் ஆரம்பமானது. இருந்தும் திரையரங்குகள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருந்து வரும் நிலையில் தியேட்டர் அதிபர்கள் வருமானம் இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தியேட்டர்கள் திறப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளது. அதில்...

 

"தமிழ்நாடு திரையரங்குகள் விரைவில் திறக்கப்படாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார். இது ரிலீசுக்காக காத்திருக்கும் அனைத்து திரைப்படங்களும் ஓடிடியில் வெளியாக ஒரு பாதையை உருவாக்குகிறது. அடுத்த 6 மாதங்களில் குறைந்தது 30 தமிழ் திரைப்படங்கள் ஓடிடி வழியாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்" என பதிவிட்டுள்ளது.

 

 

Next Story

நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழ் பட இயக்குனர்கள்!

Published on 31/10/2019 | Edited on 01/11/2019

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தலைவர் ஆர்.கே செல்வமணி திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனிடம் இன்று காலை வழங்கினார். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்து அவர் பேசியபோது... 

 

ns

 

''இன்று காலை 10 மணி அளவில் மதிற்பிற்குரிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தலைவர் ஆர்.கே செல்வமணி, பொருளாளர் சாமிநாதன், துணைத்தலைவர் ஸ்ரீதர், தீனா மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க பொது செயலாளர் ஆர்.வி.உதயகுமார், இணை செயலாளர் லிங்குசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சென்று சந்தித்தோம். அந்த சந்திப்பில் எங்களின் கோரிக்கையாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் ஆண்டிற்கு அவர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்றும், திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்துவதற்கான சான்றிதழ் பெரும் விலங்குகள் நல வாரியம் அமைப்பின் கிளையை சென்னையிலும் அமைக்கவேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட்டுகளை இந்தியா முழுவதும் அமல்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம்.

 

 

மேலும் டிக்கெட் மீதான ஜிஎஸ்டியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் மூத்த உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் விவாதித்தோம். அப்போது அவர் எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து நன்கு பதிலளித்தார். மேலும் உடனடியாக விலங்குகள் நல வாரியம் அமைச்சரை தொடர்புகொண்டு அவர்களுடன் வரும் 4ஆம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நடத்திடவும், அதில் அவருடன் நாங்களும் கலந்துகொள்ளவும் ஏற்பாடு செய்து, அதில் நல்ல முடிவு கிடைக்க வழி செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பிலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பிலும் எங்கள் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.