actor vishnu vishal tweet about fir movie

நடிகர் விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, 'ஜீவா', 'ராட்சசன்', 'இன்று நேற்று நாளை' ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். இவர்தற்போது இயக்குநர்மனு ஆனந்த் இயக்கும் 'எஃப்.ஐ.ஆர்.' படத்தில் நடித்துள்ளார். இதில் மஞ்சிமாமோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

Advertisment

இந்நிலையில், 'எஃப்.ஐ.ஆர்.' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகியது. இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்," 'எஃப்.ஐ.ஆர்.' படம் ஓடிடியில் வெளியாகுவதாககூறப்படும் செய்தி தவறானது. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். நான் எப்பொழுதும் சொல்வதுபோல ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் படத்தை திரையரங்கில் வெளியிட முயற்சி செய்துவருகிறேன். நாங்கள்சிறந்த திரையரங்கு அனுபவத்தைக் கொடுப்பதற்காக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கும் 'மோகன் தாஸ்' படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.