Skip to main content

"2 வருடமாக பேசிக்கொண்டே இருந்த படம்" - நடிகர் வெற்றி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

actor vetri speech at Memories movie press meet

 

இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள படம் மெமரீஸ். இப்படத்தில் பார்வதி அருண் நாயகியாக நடிக்க ரமேஷ் திலக் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

 

நாயகி பார்வதி அருண் பேசியதாவது, "இதுதான் எனது முதல் தமிழ்ப்படம் ஆனால் காரி முதலில் வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு எல்லாமே காட்டில் தான் நடந்தது. என்னுடைய கேரக்டர் ரொம்ப சின்னது தான் ஆனால் உங்களுக்குப் பிடிக்கும்" என்றார்.

 

நடிகர் வெற்றி பேசியதாவது, "எட்டு தோட்டாக்கள் முடிந்த உடனே இந்த கதையை என்னிடம் சொன்னார்கள். 2 வருடமாக பேசிக்கொண்டே இருந்த படம். அந்த நேரத்தில் வேறு ஹீரோவை வைத்துப் பண்ணுங்கள் என்று சொன்னேன் ஆனால் நான் தான் வேண்டும் என வெயிட் பண்ணி இந்தப் படம் எடுத்துள்ளார்கள். என்னை நம்பியதற்காக இயக்குநர்களுக்கு நன்றி. முழுக்க அடர்ந்த காட்டுக்குள் கஷ்டப்பட்டு படம்பிடித்துள்ளோம். எனக்கு இதில் 4 தோற்றங்கள்" என்றார்.

 

இயக்குநர் ப்ரவீன் பேசியதாவது, "மெமரீஸ் வைத்து இதுவரை நிறையப் படங்கள் வந்துள்ளது. ஆனால் இதில் நீங்கள் படம் பார்க்கும் போது நீங்களே அந்த பாத்திரமாக மாறிவிடுவீர்கள் அப்படி மாறி பார்க்கும்போது படம் எளிதாகப் புரியும். இந்தப் படம் உங்களுக்கு நிறைய ஆச்சரியம் தரும்" என்றார். 

 

இயக்குநர் ஷியாம் பேசியதாவது, "நான் மலையாளி தமிழில் படம் செய்துள்ளேன். இக்கதைக்காக கேரளாவில் தயாரிப்பாளர் தேடினபோது யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி நாயகனாக நடிக்கிறார் என்று கூறியபோது ஷிஜு சார் ஜீவி படம் பார்த்து உடனே படம் செய்யலாம் என ஒத்துக் கொண்டார். இப்படம் மிக சிக்கலான சைக்கலாஜிக்கல் திரில்லர். படம் ஒரு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் நிவாரணத்திற்கும், ஃபெப்சிக்கும் லட்சக்கணக்கில் நிதியுதவி அளித்த நடிகர்!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.

 

fsf

 

அந்தவகையில், 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி படத்தில் நாயகனாக நடித்த நடிகர் வெற்றி, 5 லட்சம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதில் 4 லட்ச ருபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 1 லட்ச ருபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தமிழ்த் திரைப்பட தொழிலாளர்களுக்கும் வழங்கினார். மேலும் இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. ''COVID-19 ஐ எதிர்த்துப் போராட வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் நாங்கள் செய்த சிறு உதவி'' என பதிவிட்டுள்ளார்.