கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EVyaW5dUMAAzLRn.jpg)
அந்தவகையில், 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி படத்தில் நாயகனாக நடித்த நடிகர் வெற்றி, 5 லட்சம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். அதில் 4 லட்ச ருபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 1 லட்ச ருபாய் நிதியுதவியை கரோனா வைரஸ் பரவலால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட ஃபெப்சி தமிழ்த் திரைப்படதொழிலாளர்களுக்கும் வழங்கினார். மேலும் இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. ''COVID-19 ஐ எதிர்த்துப் போராட வெற்றிவேல் சரவணா சினிமாஸ் சார்பில் நாங்கள் செய்த சிறு உதவி'' என பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)