இசைஞானி இளையராஜா தனது இசையால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாதுஉலக ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். சமீபத்தில் இவர்தனது 80 வது பிறந்தநாளை கொண்டாடினர். இதனைமுன்னிட்டு சென்னை மற்றும் கோவையில் இளையராஜா தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும்வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து அடுத்ததாகமதுரையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் இளையராஜாவுடன் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளநிலையில் வைகைப்புயல் வடிவேலும்கலந்துகொள்ளவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "எல்லாருக்கும்வணக்கம். நான் பிறந்த மதுரை பட்டணத்திற்கு இளையராஜா வருகிறார். இதை கேட்டவுடன் எனக்கு பெரும் மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்த கச்சேரிக்கு வருவேன், ஏனென்றால் தரையில் பாடிய என்னை திரையில் பட வைத்தது அவர்தான். முத்துராசு முத்துராசு... காத்து நம்ம பக்கம் வீசுன, முட்டகோசு முட்டகோசு என்றும் வாழ்க்கையில் பாசு நா... என்ற பாடலை அவர்தான் என்னை பாட வைத்தார். இந்த பாட்டின்மூலம் எனக்கு முதல் பிள்ளையார் சுழி போட்டது இளையராஜா ஐயாதான். அதனால்அவருடன் நிகழ்ச்சியில்கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீக்கிரம் வரேன், நிகழ்ச்சியில் பாடுகிறேன்" என்று தனக்கே உரித்தான பாடி லாங்வேஜில்பேசியுள்ளார்.