Skip to main content

பிரபல நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மரணம்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

 

Theepetti Ganesan

 

ரேணிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவர், சமீபகாலமாக போதிய பட வாய்ப்புகள் இன்றி பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவைச் சந்தித்து வந்தார்.

 

இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தீப்பெட்டி கணேசன், திடீர் மாரடைப்பால் நள்ளிரவு காலமானார். இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

கரோனா நெருக்கடிநிலை காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த போது பால் வாங்குவதற்குக் கூட தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி  தீப்பெட்டி கணேசன் வெளியிட்ட உருக்கமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரன்ஸை தொடர்ந்து தீப்பெட்டி கணேசனுக்கு உதவிய சினேகன்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமா துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்குப் பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு உதவுவதாகச் நடிகர் ராகவா லாரன்ஸ் சமூகவலைத்தளத்தில் நேற்று முன்தினம் அறிவித்தார். மேலும் தீப்பெட்டி கணேசன் நடிகர் அஜித் தனக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட விடியோவை அஜித்திடம் சேர்ப்பதாக லாரன்ஸ் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது தீப்பெட்டி கணேசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து உதவி செய்துள்ள பாடலாசிரியரும், நடிகருமான சினேகன் இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

 

 

 

 

gvdgd

 

"தன் குழந்தைகளுக்கு பால் வாங்கக் கூட வசதியில்லை என கண்ணீர் மல்க ஒரு பதிவினை வலைத்தளத்தில் நடிகர் தீப்பெட்டி கணேசன் மனம் உருக பதிவிட்டு இருந்தார். அவரை இன்று சந்தித்து எனது 'சினேகம் செயலகம்' என்ற அறக்கட்டளையின் சார்பில் இரண்டு வாரத்திற்கான அனைத்து உணவுப்பொருட்களை வழங்கியதோடு அவரின் இரண்டு குழந்தைகளின் இந்த வருட கல்விச்செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற நம்பிக்கையைத் தந்துவிட்டு வந்தேன். இதுபோல பல கலைஞர்களுக்கு பல உதவிகள் இந்தத் தருணத்தில் தேவைப்படுகிறது. மனம் உள்ளவர்களும் பணம் உள்ளவர்களும் உதவ முன்வாருங்கள்" எனக் கூறியுள்ளார்.

 

Next Story

கரோனோவால் கஷ்டப்படும் துணை நடிகர்..! உதவி செய்த திரை பிரபலங்கள்! 

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தினக்கூலியை நம்பியுள்ள பணியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாகியுள்ளது. மேலும் சினிமாத்துறையில் வேலையில்லாமல் கஷ்டப்படும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு ஃபெப்சியின் வேண்டுகோளுக்கு பின் சினிமா பிரபலங்கள் உதவி வருகின்றனர். அந்தவகையில் தற்போது கரோனா பீதி காரணமாகப் படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டுவரும் ரேணிகுண்டா, பில்லா 2 உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசனுக்கு நடிகர்கள் விஷால், ஸ்ரீமன், பிரேம் குமார் மற்றும் பூச்சி முருகன் உள்ளிட்ட நடிகர்கள் உதவி செய்துள்ளனர். இதுகுறித்து நடிகர் தீப்பெட்டி கணேசன் வெளியிட்டுள்ள வீடியோவில்...

 

fsdag

 

''வணக்கம், நான் தீப்பெட்டி கணேசன் ரேணிகுண்டா படத்தில் நடித்தவர். நான் இந்த கரோனா பிரச்சினையால் மிகவும் பாதித்திருந்தேன். அதை நடிகர் பிரேம் குமார், நடிகர் பூச்சி முருகனிடம் சொல்லி, நடிகர் பூச்சி முருகன் எனக்கு உதவி செய்தார். மேலும் நடிகர் விஷால் மற்றும் என் சினிமா நண்பர்கள் அனைவரும் எனக்குத் தேவையான வீட்டுக்குப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர். இந்த நேரத்தில் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நடிகர் ஸ்ரீமன் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேளுங்கள் எனத் தொலைபேசியில் தெரிவித்தார். அவருக்கும் இந்த நேரத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.