Advertisment

விஷ்ணு விஷால் தந்தை மோசடி விவகாரம்: மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடிகர் சூரி வாக்குமூலம்

actor soori

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி நடிகர் சூரி வாக்குமூலம் அளித்தார்.

Advertisment

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கித்தருவதாகக் கூறி முன்னாள் டி.ஜி.பி.யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா தன்னிடம் மோசடி செய்ததாக சென்னை அடையாறு போலீசில் நடிகர் சூரி புகார் அளித்தார். பின்னர், தன்னுடைய புகார் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., பிரிவுக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளதால் வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி ஆறு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

Advertisment

இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னிலையில் ஆஜராகி மோசடி குறித்து நடிகர் சூரி வாக்குமூலம் அளித்தார். பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், தப்பு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது எனக் கூறிய சூரி, நீதிமன்றம், காவல்துறையை கடவுளைப்போல நம்புவதாகவும் தனக்கு நீதி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

actor soori vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe