Advertisment

"நீங்களும் மருத்துவர்கள் அறிவுரையை கேளுங்கள்" - நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்! 

vgddvd

Advertisment

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்லக் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் சௌந்தரராஜா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், "அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, என் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி என்னுடைய முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன். நீங்களும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். கரோனாவை ஒழிப்போம்.!!" என பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

actor soundara raja
இதையும் படியுங்கள்
Subscribe