Skip to main content

“நம்பிக்கையை இழிவாக பேசுவதால்...”-சௌந்தரராஜன் ட்வீட்! 

Published on 15/07/2020 | Edited on 15/07/2020
soundaraja

 

சமூக ஊடகங்களில் சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம்தான் சில நேரங்களில் அது சமூக ஊடகங்களைக் கடந்து வழக்குகளாகவும், போராட்டங்களாகவும் உருவெடுப்பதும் உண்டு. அதுவும் இந்தக் கரோனா காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான சமூக ஊடக பயன்பாடு இருக்கிறது. அதை யூ-ட்யூபர்களும், சோஷியல் மீடியா பிரபலங்களும் நன்றாக பயன்படுத்துகின்றனர். லேட்டஸ்ட் சர்ச்சையாக ‘கந்த சஷ்டி’ கவசம் குறித்த வீடியோவும், இன்னொருவர் வரைந்த கார்ட்டூனும் பல விவாதங்களை எழுப்பி வருகின்றன. பொதுவாக சினிமா பிரபலங்கள் இதுபோன்ற விஷயங்களில் எந்த சார்பும் எடுக்காமல் ஒதுங்கிக்கொள்வார்கள். வெகுசிலரே கருத்து தெரிவிப்பார்கள். 

 

அந்த வகையில் நடிகரான சௌதரராஜன் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “பகுத்தறிவு என்ற பெயரில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை அவதூறாக பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன். நாத்தீகம் என்ற பெயரில் பிறர் வழிபாட்டு நம்பிக்கையை இழிவாக பேசுவதால், துவேஷம் பெறுமேயன்றி வேறு எதுவும் நிகழாது. ஓம் சரவணபவ” என்று கூறியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நீங்களும் மருத்துவர்கள் அறிவுரையை கேளுங்கள்" - நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

vgddvd

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்லக் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் சௌந்தரராஜா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், "அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, என் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி என்னுடைய முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன். நீங்களும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். கரோனாவை ஒழிப்போம்.!!" என பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Next Story

"இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்" - நடிகர் சௌந்தர ராஜா கவலை!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bgbdfsbsx

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சௌந்தர ராஜா மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த மாமனிதர் ட்ராஃபிக் ராமசாமி ஐயா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். சமூக நலனுக்காக போராடுவதில் இவர் ஒரு முன் மாதிரி. இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்து இருக்கிறேன். உங்கள் ஆத்மா இறைவனடி சேரட்டும் ஐயா" என கூறியுள்ளார்.