மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனை துவக்க விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார், தன் அனுமதியில்லாமல் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்ஃபோனை கோபமாக தட்டிவிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் விமர்சனத்தைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று நடிகர் சிவக்குமார் வெளியிட்ட ஒரு வீடியோவில், மன்னிப்பு கேட்டார். அந்த வீடியோவில் அவர் பேசியது,

Advertisment

actor sivakumar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

"ஆர்வம் மிக்க ரசிகர்கள், கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்வார்கள். ஒரு பிரபல கலைஞன் இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். 'என்ன இருந்தாலும் சிவக்குமார் செல்ஃபோனைத் தட்டிவிட்டது தவறு' என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில் என் செயலுக்காக உளமார நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். I'm very sorry"