நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில்ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த'ஃபர்ஹானா' படம்கடந்த 12 ஆம் தேதிவெளியானது. இப்படத்தைஎஸ்.ஆர்.பிரபு தயாரித்த நிலையில்செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள்செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பலர் படக்குழுவினரைப் பாராட்டிவாழ்த்து தெரிவித்தனர்.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில் மத உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று சில இஸ்லாமிய அமைப்புகள் கூறி வந்தன. இதையடுத்து படத் தயாரிப்பு நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு, "ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல" என அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து திருவாரூரில் உள்ள 1 திரையரங்கில் எதிர்ப்பின் காரணமாக இப்படத்தை திரையிட மறுத்துவிட்டனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது சற்று பரபரப்பைஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்படத்தை மூத்த நடிகர் சிவகுமார் பார்த்து பாராட்டியுள்ளதாகஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஃபர்ஹானாவைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி சிவகுமார் சார். இது எங்கள் படக்குழுவுக்கு மேலும் ஒரு பலத்தையும் சக்தியையும் தருகிறது. உங்கள் வாழ்க்கையிலிருந்து பல பாசிட்டிவான விஷயங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி சார். அது உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தது" என நெகிழ்ச்சியுடன்குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவகுமாருடன் எடுத்தபுகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.