Advertisment

"மகன் வடிவில் அப்பா மீண்டும் என்னுடைய விரல் பிடித்திருக்கிறார்..." சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

sivakarthikeyan

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, சிவகார்த்திகேயனுக்குத் திரைத்துறை பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe